திங்கள், 12 மே, 2014

ஆஞ்ச நேயர்

ஆஞ்ச நேயர் என்பது முன்னர் இராமர்பால்  "ஆழ்ந்த நேயம்" உடையவர் என்ற தொடரின் திரிபு என்று  கூறப்பட்டது.

ஆனால் "ஆழ்ந்த" எனற்பாலது "ஆஞ்ச" என்று திரிதற்குரிய சாய்நிலை குறைவு என்று தெரிகிறது.

இந்தத் திரிபுகளை நோக்குக.

பாய்ந்த  >  பாஞ்ச.
ஆய்ந்த >  ஆஞ்ச.    (ஆஞ்ச கீரை).
ஓய்ந்த >  ஓஞ்ச    (ஓஞ்ச வாய்).
காய்ந்த >  காஞ்ச    (காஞ்ச துணி)
தேய்ந்த > தேஞ்ச   (தேஞ்ச பல்லு).

ஆகவே, ஆய்ந்த நேயர் என்பதன் திரிபே "ஆஞ்ச  நேய" என்பது, மிகத் தெளிவாகின்றது.

இதன் பொருள்,  நண்பராக முன் வந்த  பலருள், ஆராய்ந்து எடுத்த நேசனே "ஆஞ்ச  நேயர் என்பது தெள்ளத் தெளிவாகின்றது.

கருத்துகள் இல்லை: