வெள்ளி, 30 மே, 2014

ஓதம் : noise, uproar.

ஓதம்  :  noise, uproar.  .

ஓதுங்கால், பலத்த ஒலி ஏற்படுவதுண்டு.  கூடியிருப்போர் யாவருக்கும் கேட்கும்படியாகவே  ஓதப்படும்.  பலர் அமர்ந்து ஓதுகையில் பேரொலி எழுமாதலின் ஓதம்  (ஓது+ அம்) பேரொலி எழுப்புதலைக் குறிக்கலாயிற்று.

"ஓ" என்னும் ஒலிக்குறிப்படியாய்ப் பிறந்த சொல்லே  ஓது என்பது. இதில் "து ‍ வினைச்சொல்லாக்க விகுதி.

நோய் குறிக்கும் ஓதம் என்ற சொல் ஊது என்பதிலிருந்து தோன்றியது.  இங்கு ஆயப்பட்ட ஓதமென்பது ஒலிக்குறிப்புச் சொல். இவற்றின் பிறந்தகங்கள் வெவ்வேறாம்.

கருத்துகள் இல்லை: