திங்கள், 19 மே, 2014

Revelation of tea shop connection


தேநீர் செயும்பையன் என்றார் அவர்மொழியின்
வீணீர்மை விண்ணெரி தீ.   (1)

எடுபடாப்  புன்மொழி எங்கும் இயம்பிக்
கெடுபடல் காத்தல் கடன். (2)

யாவரும் மன்னரே மக்கள் ஆள்  மாண்பினில்
தேதரும் தீதிலார் காண்.  (3)

பொருள் :

இது பிரதம மந்திரி மோடி அவர்களைப் பற்றிய சில வரிகள்.

1.  தே நீர் =  tea. செயும் =  செய்யும். வீணீர்மை =  வீண் தன்மை . விண்ணெரி = ஆகாயத்தில்  எரிகின்ற நெருப்பு  போன்றது.  ஆகவே வீண் பேச்சு என்பது எல்லோருக்கும் தெரியும் .

2 எடுபடா = மக்கள் ஏற்க முடியாத . புன்மொழி = கீழ்த் தரமான பேச்சு . இயம்பி - சொல்லித் திரிந்து.  கெடுபடல் = தீமையுட் படுதல். காத்தல் = (கேடின்றிக்) காத்துக் .  கொள்ளுதல்.  கடன் = கடமை.

3.யாவரும் = எல்லாக் குடிமக்களும் .  மக்கள் ஆள் = மக்கள் ஆட்சி (செய்யும்)  

 தே தரும் -       தே நீர் விற்கும் .  தீதிலார் = தீமை இல்லாதவர்கள். 

Even with the revelation that Mr Modi was a tea boy and that he was marred but not with his wife now,  the Congress still lost.



`

கருத்துகள் இல்லை: