திங்கள், 6 மே, 2024

அட்சரமும் சரசுவதியும்

 இந்நாட்களில் சரம் என்ற சொல் பெரிதும் பேசுவோரால் அருகழைக்கப்படுவதில்லை.  ஒருகாலத்து அது கவர்ச்சிச்சொல்லாய்ப் பேசுவோரிடை இருந்தது,  அட்சரம் என்ற சொல்லில் அது இருக்கிறது. இவற்றைச் சரமாக எழுதி அழகுபார்ப்பதற்குத் துணைப்பொருட்கள் சிலவே இருந்தன.  சரம் ஒரு தேவியினால் சாத்தியமாயிற்று என்று நினைத்தனர்.  அந்தச் சரம் என்ற சொல்லைப் பயன்படுத்தியே அவளையும் அழைத்து அறிந்துகொண்டனர் அவள் சொந்தமாகவே அங்கு வந்துவிட்டவள். சரத்தில் தானே தோன்றியவள் என்ற பொருட்பட அவளுக்குப் பெயரும் இட்டனர். பிறவிப்பயன் என்பதென்ன?  இதை அறியானாயின் அவன் மடையன்.   ஆனால் இவர்கள் மிக்க அறிவாளிகள். மகிழ்வுக்கோ குறைவில்லை.

பல சிறு கட்டிகளை வரிசையாக அடுக்கிக் கோத்து  ஒரு மாலை செய்தனர். வரியடுக்கில் வைத்த மாலை. அடுக்கமுறு மாலை.  ஒரு கடின ஒலியை விலக்கி ஒரு புதுச்சொல்லைப் படைத்துக்கொண்டனர்.  அந்தச் சொல் அக்கமாலை. அக்கமாலை உண்டான மகிழ்வில் எழுத்து ஒன்றை இணைத்துக்கொண்டு, அதைப் புகலுறு புனைகுமாலை என்றனர்.  அழகே அழகு. தண்டியாசிரியன் சொன்ன சித்திரகவிகள் போலப் புனைந்துகொண்டனர்.

அறுக்க அருகில் வருவதுதான்  அறுக்கரம்.   அறுக்க அறுக்க அருகி வந்து வேறு பொருள் பயக்கும்.  அறுக்க அருகில் ----   அக்கரம். அழகுறு சொல்லமைப்பு.  வர வர வர அது வருவது.  அண் அன் அனமாகும்.

புரிய நேரமாகக் கூடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.

கருத்துகள் இல்லை: