வெள்ளி, 8 ஜனவரி, 2021

சஞ்சலம்

 மனம் ஒரு நிலைப்படாமல் இடர்ப்படுதலும் ச.லிப்பு என்றே சொல்லப்பெறும். இதன் அடிச்சொல் "சல்"  என்பது.

சல்லுதல்  - சல்லடையால் சலித்தல்

சலித்தல் -  பெரிது சிறிது வேண்டியது வேண்டாதது  என,  சிறு துளைகள் உள்ள ஏனத்தால் பிரித்தெடுத்துத் தூய்மை செய்தல். துளைப்பாத்திரத்தால் கூலங்களைச்  சரிசெய்து மேற்கொள்ளுதல். ஏற்ற துணித்துளைகளாலும் சலிக்கலாம்.

சல் - சலிப்பு:    கோபம். மனநிறைவின்மை.

சலிப்புப் பண்ணுதல் - தொந்தரவு பண்ணுதல்.

கூலத்தைத் துளை ஏனத்தில் அலைத்தெடுப்பதுபோல எண்ணங்கள் நிலையின்றி இருத்தல் .

அலை என்பதன் அடிச்சொல் அல்.  அகரத் தொடக்கமும் வருக்கமும் சகரத் தொடக்க வருக்கங்களாகும்.

அல் >  சல்>  சலி > சலித்தல்.  

இதுவுமது:  அமண் - சமண்.  பிற மற்ற இடுகைகளில் அறிக.

கவனிக்க:

அல்  > அலை

அல் >  அலம்பு.

அல் > அலட்டு

இவை ஆடுதல், அசைத்தல், முதலிய தொடர்புகளை உடையன.   அல்.- இதுவே சல் என்ற சொல்லிலும் உள்ளது. இவ் வசைவுச் சொற்கள் அவற்றிற்கு ஒப்பான மனச்செயல்களைக் குறிப்பனவாயின.   இஃது ஒப்புமையாக்கம்.

சல் > சலனம் என்பதும் இத்தொடர்பில் விளைந்ததே.  ( சல்+ அன் +அம்);

இனிச் சஞ்சலம் என்பது:

தம் + சலி + அம் =  சம் + சலி + அம் >  சஞ்சலம்.   லி e


ன்பதன் இகரம் கெடுதல்.

தம் > சம்  ( த - ச திரிபு)

சலி + அம் >  சலம் 


தம் என்பது ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கை குறிப்பது.  சம் என்பதும் அது.

மனிதன், மனம் ஆகிய இரண்டும் சேரப் பன்மை ஏற்படும்.  ஆகவே சஞ்சலம்

என்பதில் இவ்விரண்டும் தொடர்பு அறுந்த அசைவு காணப்பெறும்.. ஒருங்கியலாமை.

அறிக.  மகிழ்க.

 

  


கருத்துகள் இல்லை: