வெள்ளி, 13 நவம்பர், 2020

தாட்சன்னியம் என்பது

 இச்சொல்லைப் பார்ப்போம்.

அரசன் போலும் அல்லது இறைவன்போலும் மனமிரங்கி அருளும் வல்லோனின் தாள்களில் சென்று வீழ்ந்து பெற்றமைவது தாட்சன்யம். இச்சொல் அமைந்த விதம்:

தாள் - கால்கள்; திருவடிகள்.

செல் - அடைக்கலம் அல்லது சரண்புகுதல்.

நீ. ( இது கருணை வேண்டுவோனைக் குறிக்கிறது ).

அம் - பெரிதும் அமைதல் குறிக்கும் விகுதி. இங்கு பெற்றமைதல்.

தாள்+ செல் + நீ + அம் = தாட்சென்னீயம் > தாட்சன்னியம்.

செல் என்பதன் முதல்நிலை எகரம் அகரமாகத் திரிந்தது.

இத்தகு திரிபுகள் பிற: எளியர் - அளியர், தெரிசனம் > தரிசனம்.

நீ என்பது நி என்று குறுகிற்று. இன்னொரு எ-டு:

பழம்நீ என்பதில் நீ என்பதும் நி என்றே குறுகிற்று.

அல்+ நீ + அன் ( அன்னியன்) என்பதிலும் நீ குறுகியவாறு கண்டுகொள்க.

பொருள்: நீ அல்லாத பிறன்.

இவ்வாறு தாட்சன்னியம் என்பது இரக்கம் என்று பொருள்பட அமைந்த சொல் எனக் கண்டுகொள்க. காலில்விழுந்து பெறுவது.

தயவு தாட்சன்னியம் என்பது பேச்சுவழக்கில் மரபுத்தொடர்.

கருத்துகள் இல்லை: