ஞாயிறு, 8 நவம்பர், 2020

தன்னிலை இழந்த மயில்.

 முதிர்ந்த மயிலொன்று மூவுலகும் காணாத 

அதிர்ந்த ஆட்டமொன்று வியந்திட ஆடிற்றே

புள்ளியும் அதற்கில்லை புள்ளியும் கொள்ளாமல்

நள்ளிரவில் தன்வலிமை நலிந்திட இழந்ததுவே

தானாடிய மேடையை,  வான்துயர் வருத்திடவே;

நிலையில்லா இவ்வுலகை நிலையென் றெண்ணுவதோ?

மலைகளும் தோன்றுவதும் மறைவதும் இயல்பாகும்

தழங்கிற்று தன்னையே தள்ளிவிட்டார் என்றின்று!

விழுங்கினரே யானறியா வீண்நிலையில் என்றபடி,

போகட்டும் மயிலேயது கிட்டவில்லை என்றாலோ

நோகுமனம் தேற்றிடுவாய் வெட்டென்று மறந்திடுவாய்.

ஒன்றுமில்லா உலகினிலே ஒட்டாது வாழ்ந்திருப்பாய்

கருத்துகள் இல்லை: