சனி, 26 மே, 2018

சேகரித்தல் சேமி இரு; பாயிரம் ஆயிரம் : விளக்கம்

சேகரித்தல் என்பதொ ஒரு பேச்சு வழக்குச் சொல்.  தொல்காப்பிய முனிவர் தம் ஒப்பரிய இலக்கணத்தைத் தமிழ் மொழிக்கு இயற்றிய காலத்திலே  எழுதப்பெற்றிருந்த  ஓலைச்சுவடி நூல்களையும் வழக்கையும் ஆராய்ந்து பின்னர் தொடங்கியதாகவே பாயிரம் கூறுகிறது.

பா என்னும் பாட்டினால் இயற்றப்பட்டது.  நூலின் முனனே முதல் பாடலாக அல்லது தொடக்கப்பாட்டாக வைக்கப்பட்டது. நூலைப்பற்றியும் நூலாசிரியரைப் பற்றியும் உங்களுக்கு எடுத்துக்கூறுவது. இது நாம் சுருக்கமாகக் கூறுவது ஆகும். பாயிரம் - சொல் எப்படி அமைந்தது?   

பா =  -பாட்டு.
இரு =  நூலில் முன்னிருக்க வைக்கப்படுவது.
அம் =  விகுதி.

பா+  இரு + அம் =  பாயிரம்.

இப்படி இரு என்ற பலபொருட் சொல் பல சொற்களில் தோன்றுவதை முன்னர் விளக்கியுள்ளேன்.  எடுத்துக்காட்டாக  ஆயிரம் என்ற சொல்:

ஆ =   மிகுந்த.  கூடுதலான.    ஒன்று ஆகப் பெரியது என்றால் மிகவும் பெரியது என்று சொல்வதான பேச்சுவழக்க்

இரு =  பெரிய.

இருள்சேர் இருவினை என்ற குறள் தொடரில் இரு என்பது பெரிய என்று பொருடரும்.  ஈண்டும் அஃதே பொருளாம்.

அம் = இறுதிநிலை அல்லது விகுதி.

எல்லம் கூட்டினால்:  ஆ+  இரு+ அம் =  ஆயிரம்.  அப்போது அது ஆகப் பெரிய எண்.  இப்போது சிறியதே.  மலேசியாவில் மூன்று டிரில்லியன்  அரசுப் பணம் கொள்ளை போய்விட்டதென் கிறார்கள்.  ஆயிரம் இன்று பெரிதன்று.  சொல்லமைப்பில் அது பெரிது. இன்றைச் சுற்றமைப்பில் குட்டிதான்.

இரு என்பதுபோலும் சொற்கள் சொல்லமைப்பில் பயன்பட்டுள்ளன.

சில சொற்கள் நெல்வயல்களில் உழைத்தோரால் உருவாக்கப்பட்டவை.
அவற்றுள் சேமித்தல் சேகரித்தல் என்பவை கவனிக்கத்தக்க மேன்மை உடையவை.

சேர் + மி =  சேர்மித்தல்.  

இது வினைச்சொல்லிலிருந்து இன்னொரு வினைச்சொல்  உருவாக்கும் பொதுமக்களின் திறமை. சொல்லிக்கொடுத்ததை மட்டும் படித்த புலவனுக்குப்
புரியாத திறமை.  இது மொழிக்கு உதவியுள்ளது.

தமிழ் என்பது மக்கள் மொழி.

சேர்மித்தல் என்பதில் ரகர ஒற்று வீழ்ந்து சேமித்தல் என்றானது.  சேர்த்தலும் சேமித்தலும் ஒன்றானாலும் நுண்பொருள் வேறுபாடு உடையவை.  சேமிப்பு வங்கி என்னும்போது இச்சொல் நன் கு பயன்படுகிறது.  சேர்ப்பு வங்கி என்றால் சிறக்கவில்லை.

சேகரித்தல்:   இது சேர் + கு + அரி  + தல்.

இங்கும் ரகர ஒற்று வீழும்.  முதற்சொல் சே என்று ஆகும்.

கு என்பது சேர்விடம் குறிக்கும் சொல். இங்கு சொல்லிடைநிலையாகப் பயன்பட்டது.

அரித்தலாவது  தன்னருகில் வரும்படியாக இழுத்தல்.  அருகு > அரு> அரி.
இதில் குவிகுதி வினையாக்கச் சொல்லமைப்பு.  இந்தக் கு தேவையில்லை.  ஆகவே  அரு என்பதை மட்டும் கொண்டு, ஓர் இ வினையாக்க விகுதி சேர்த்து
அரி என்ற சொல் படைக்கப்பட்டது.  அரு  இ!   என்றால் பக்கத்தில் வா என்று வாக்கியமாகும் .

சேகரி என்பதில் இந்த   அரி பயன்பட்டது.

இன்னொரு நாள் சந்திப்போம்.


கருத்துகள் இல்லை: