திங்கள், 7 மே, 2018

குழந்தையைக் கற்பழிப்பார்க்குத் தூக்கு சரியானது.

ஊர்வசிகள் அரம்பையர்தாம் தோற்றுப் போகும்
ஒப்பற்ற அழகுடையார் எப்போ தும்தான்
பார்வையிலே படங்கள்தரும் காட்சி தம்மில்
பார்க்கின்றார் சுவைக்கின்றார் பழங்கள் யாவும்
ஆர்கைக்கும் கிட்டாவோ என்ற  சந்தே
அடுத்தவீட்டில் எதிர்த்தவீட்டில் பாவப் பட்ட
நேர்சிறிய பெண்குழந்தை தம்மேல் பாய்ந்து
நீள்நரகக் குறுஞ்செயல்கள் நிகழ்த்து கின்றார்.

வன்புணர்வு மேற்கொள்வார் அவர்க்குத் தூக்கு
வாய்ப்பதுதான் சரியான ஒறுத்தல் என்று
துன்(பு)ணர்ந்த சட்டத்தால் நாட்டில் நன்மை
தோன்றுவதும் கைகூடும்; தீமை தோய்ந்த
கண்ணிருந்து மன்பதையைக் கருகச் செய்யும்
காளையரால் காய்க்குமொரு நன்மை உண்டோ?
புண்வளர்ந்த முகத்தவர்கள் புவியின் நீங்கிப்
போயினிந்த நோயழியும் மே வும்   நன்றே!

அருஞ்சொற்கள்:
என்ற சந்தே -  என்று அசந்தே.
ஒறுத்தல் = தண்டனை;
துன்பு -  துன்பம்
மன்பதை =  சமுதாயம்.
காய்க்கும் -  உண்டாகும்.
நன்றே - நன்மையே.
வன்புணர்வு = கற்பழிப்பு.

கருத்துகள் இல்லை: