ஞாயிறு, 20 மே, 2018

ஊழல் வேண்டுமோ? தூய்மை வேண்டுமோ?


(கலிவெண்பா )

ஊழலை முன்வைத்து  வாழ்வ  தெலியது
பாழுடை வீடெனில் கொள்வது துள்ளலே!

ஓட்டைகள்  போட்டுமே  மாட்டுவ தின்றியோர்
கோட்டையில்  போல குதூகலம் கூட்டுதல்..

நாட்டிலும் ஆதிறம் நாடிடு  மாந்தர்கை
யூட்டி னில்  ஓங்குதல் எங்கும்கண்  கூடு்ணர்!

 சட்டப்  படிவழிக்  கிட்டா  உரிமமே
கொட்டிக் கொடுத்தால் வசதியே கிட்டுதல்.

ஊழல்  வளாகத்தும் நன்மை உளதெனில்
வாழும் நலம்பெற வாய்ப்புறா  ஊழல்.

திறமொன் றிலாதார் பெறுவர்  முனைவர்
திறமுடை யோர்கீழ் இருப்பவர் காண்கவே..

ஊட்டினைப் பெற்றோரும் ஓட்டுவர் காலமே
காட்டில்  விலங்கென நாட்டிடும்  ஆட்சியே.

ஊழலைப் போற்றுவோர் பாதி உலகினில்
வாழ்முறை போற்றுவோர் பாதி உளரிவண்,

ஊழலும் ஆங்காங்கு வெல்லுமே ஓங்கிட
யாழிசை மீட்டுவர்  மூளை இலாதவர்.

ஈற்றினில் வீழ்ச்சியோ காற்றில் நெருப்புபோல்
கூற்றினை  ஆக்கும் குறிதவ றாதே.

கறுப்ப்புப் பணத்தை வெறுப்பவர் உண்டு;
கறுப்புப் பணத்தொடு  வாழ்பவர் உண்டுகாண்

ஊழல் இலாமை  உயர்பவர்  ஆயினோ
ஆழ்ந்தநற் சிந்தையர் போற்றுக  அஃதினை;

வெற்றி  கருப்புப்  பணத்தவர் பெற்றிடில்
சற்றும் அதனை   ஒழிகவே  .ஒற்றுதல்

உண்மை உலகினில் வெல்க  அதுகொண்டு
வண்மை பெறுமே உலகு.


Will edit and make some changes later.You may
enjoy this poem for now and you may
give your critical appraisal.




 
 



கருத்துகள் இல்லை: