திங்கள், 28 மே, 2018

மகர வகர ஒலியுறவும் திரிபுகளும். சிறு கண்ணோட்டம்

மகரமும் வகரமும் ஒலியுறவு உடைய எழுத்துக்கள். நாம் கவிதை எழுதும்போது  முதலடியை மகரத்தில் தொடங்கி அடுத்த அடி தொடங்குவதற்கு  மகரத் தொடக்கமான இன்னொரு சொல்லைத் தேடுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். மகரத்தில் கிட்டவில்லையானால் வகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லுடன் இரண்டாவது அடியைத் தொடங்கலாம். மோனை வந்ததுபோலவே கேட்போருக்குத் தோன்றுமளவுக்கு இவ்வெழுத்துக்களுக்கு ஒலியுறவு இருக்கின்றது.

இம்முறை சொல்லமைப்பிலும் வந்துள்ளது.

வினவுதல்  -     மினவுதல்.   (பொருள் ஒன்றுதான்.)
விஞ்சுதல்   -     மிஞ்சுதல்.

இதன் தொடர்பில் விரட்டுதல் -  மிரட்டுதல் என்பது கவனிக்கத்தக்கது.

மிரட்டுதல் என்பது அச்சுறுத்துதல் என்ற பொருளிலே மக்களிடை அறியப்பட்டுள்ளது.   விரட்டுதல் என்பது ஓடும்படி செய்தலைக் குறிக்குமென்று நாமறிவோம்.  எனினும் இச்சொல்லுக்கு அச்சுறுத்துதல் என்ற பொருளும் உள்ளது.   ஆகவே  அந்நிலையில்  மிரட்டுதல் என்பது விரட்டுதலுக்கு ஒப்பாகிறது.

எனவே:

விரட்டுதல் -  மிரட்டுதல்.

இதற்குக் காரணம் விலங்குகளை அச்சுறுத்தியே ஓடச்செய்ய இயலும் என்பதாக
 இருத்தல் தெளிவு.

மிகுதியே  பின் விகுதி என்று திரிந்தது என்பது நாம்  முன் இடுகைகளில்
கூறியதாகும்..மி -  வி.  மிகுதி > விகுதி,


அடிக்குறிப்பு:

-------------------------------------------------

1.மால்வரை ஒழுகிய  வாழை வாழை   (   மா -  வா  )  மோனை.
சிறுபாணாற்றுப்படை.   21.

2.  -நாவொலியிலும்  வானம் என்பது மானம் என்றே வரும்.
மானம் மழை வந்தால்தானே இங்கே பயிர் விளையும் என்பர்.

மானாமாரி >  வானாமாரி என்பதும் காண்க.

3  வல் -  தமிழ்ச்சொல்.  பொருள்:  வலிமை.   மல்   வலிமை.
வல் = மல் .   வல்லன் -  மல்லன்.   வல்  + அன்  = வல்லன்  > வலன் .
வகர மகர மோனைத் திரிபு.

வல்  என்பது பல் என்றும் திரியும்.   வலம் > பலம் , (வலிமை ).

கருத்துகள் இல்லை: