திங்கள், 30 ஏப்ரல், 2018

பிரசாதத்தில் பல்லி.....

கோயிலில் பத்தகோடிகட்குத் தரப்பட்ட  அருளுணவில் பல்லி கிடந்து அதை உண்ட பலர் நோய்வாய்ப்பட்டனர்,  இச்செய்தியை கவிதையாய்த் தருகின்றன இப்பாடல்கள்,  கவனம் தேவை என்பதே யாம் சொல்வது.  எப்படி இதைச் செய்யப்போகின்றனர் என்பது தெரியவில்லை. பல்லிகள் எங்கும் இருப்பவை.


பல்லி விழுந்தால் பரமன் அருட்சோறு
சொல்ல அழவருமோர் சூழ்நலக் கேடாக்கும்;
நல்லதைச் செய்கின்ற நாட்டமே கோயிலிற்
புல்லிதாய்ப் போச்சே புகல்.

வாந்தி தலைவலி வாய்கோணி வீழ்ந்தனர்,
ஏந்தி இவர்களைப்போய் இட்டனரே நோய்மனையில்;
ஓந்தி சிறுபல்லி வீழ்ந்தாலும் ஊண்கெடுமே;
தேர்ந்தமேற் பார்வையே தேடு.

குறிப்பு:   இத்தகைய பல்லிகள்  விடம்  அல்ல என்று
அறிந்தோர் கூறுகின்றனர். உலகில் ஒரே வகைப்
பல்லி தான் விடமுள்ளதாம். அது அமெரிக்காவில்
ஓர் ஆற்றுப் பக்கம் உள்ளதாம். இதில் விழுந்த
பல்லி  சும்மா பூச்சிகளைப்  பிடித்துத் தின்னும்
பல்லியாம் . இருந்தாலும் இறந்தது,  நாறிப்போன
 எதுவும் உணவில் கலந்தால்  உணவு நஞ்சாகும்.
இந்தச் செய்தியை அப்படித்தான் எடுத்துக்கொள்ள
வேண்டியுள்ளது. 


More at:

food poisoning: 73 hospitalised after taking 'prasadam' in Tamil Nadu ...

73 Hospitalised In Tamil Nadu, Claim "Lizard" Found In Temple's

Lizardfoundin`prasadam' -ANDHRA PRADESH TheHindu

The spotting of a lizard in a packet of 'prasadam' caused panic among the 
pilgrims at Venkateswara Swamy temple at Dwaraka Tirumala in West 
Godavari district on Sunday. A pilgrim, Prabhu from Eluru, w.
The Hindu : Lizard in prasadam, four taken ill


கருத்துகள் இல்லை: