ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

இது பூச்சிகளின் உலகம்.



பூச்சிகள் ஆளிடம்  பூவுலகம் மாந்தற்குப்
பேச்சென்ன பேரரசு யானென்று  ---  கூச்சல்
குறைக்கசின் கோலிகள் கூத்தடிக்கும் கூடி
நிறைப்பன நீணிலம் காண்.


பொருள்
இவ்வுலகம் முழுமையும் பூச்சிகளே ஆட்சி செய்கின்றன.
மனிதன் தானே பேரரசு என்று பேசிக்கொண்டிருக்கிறான்;
பாக்டீரியாக்கள் எங்கும் கூத்தடிக்கின்றன;  இந்த
உலகத்தை நிறைப்பவையும் அவையே.  நீ அறிந்துகொள்,

சின்கோலிகள் =  பாக்டீரியாக்கள்.

பலவிதச் சின்கோலிகளாலும் பாதிக்கப்பட்டு
மருந்து உட்கொண்டிருப்போரும் இங்கு நிறைந்துள்ளனர்.
மனிதன் பெருமைகொள்ள எவையுமில்லை. 

இந்த வெண்பாவைப் பாடி மகிழ்க.


Please note an unknown virus is inserting dots in the text area freely
at will.  We have removed some dots. As they may return, we shall
review this and other posts whenever time permits. There are
also extra charges for us.








கருத்துகள் இல்லை: