வியாழன், 12 ஏப்ரல், 2018

இட்டமும் இச்சையும்.

இட்டம் இச்சை என்ற இருசொற்களையும் இன்று
ஒப்பாய்வு செய்வோம், உள்ளம் மகிழ்வோம்.

இட்டம் என்பதும் இச்சை என்பதும் முன் இடுகை
களில் விளக்கப்பட்டன. ஒப்பாய்வில் இரண்டையும்
ஓரளவு  சுட்டுவதும் சீரியைவு காட்டுவதும்
தேவையாகின்றன.

இரண்டுக்கும் அடிச்சொல் இடு என்பதே.

(  இடு )  >  இடு+ அம் =  இட்டம்.

ஆசைப்பட்ட மனத்தை எங்காவது இட்டுவிட்டால்,
இட்டது இட்டமாகிறது.  இடு+ அம் = இட்டம்.
மனத்தை இடாதவிடத்து இட்டமில்லை.

இட்டம் என்பது ஈடுபாடு. மனம் விரும்பிய
ஈடுபாடு.   இந்த ஈடுபாடு என்பதிலும் அடிச்சொல்
இடு என்பதுதான்.  இடு> ஈடு. முதனிலை நீண்ட
தொழிற்பெயர்.

படு > பாடு என்பதோர் எடுத்துக்காட்டு ஆகும்.
அதுவும் முதனிலை திரிந்து பெயரானது.

இனி இச்சை என்பதைக் காண்போம்.

இச்சையும் மனம் இடுவதே ஆகும்.

இடு > இடு+சை > இடுச்சை.

இதில் டுகரம் விலக்கி, இச்சை ஆகிவிடும்.

இடு இழு என்பன டகர ழகரப் பரிமாற்றம்.
பாழை > பாடை என்பதுபோல.
வாழகை > வாடகை போல.  வாழ்கூலி என்பதே
வாழகை.
இடுச்சை. இழுச்சை என்பன இரண்டுமே
இச்சை என்றே திரியும்,

மனம் இடுவது இச்சை. (  இடுச்சை).
மனம் இழுக்கப்படுவது இச்சை  ( இழுச்சை).

மனம் இட்டாலும் மனம் இழுபட்டாலும் விளைவு
விருப்பமாதலின் வேறுபாடு கண்டிலர்.

இரண்டு சொற்களும் ஒரு குட்டையின் மட்டைகள்.

மேலும் வாசிக்க:

http://sivamaalaa.blogspot.com/2017/11/blog-post_9.html


http://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_46.html

http://sivamaalaa.blogspot.com/2017/03/blog-post_15.html

http://sivamaalaa.blogspot.com/2018/01/blog-post_13.html

http://sivamaalaa.blogspot.com/2016/12/broadband-collapse.html 

இங்கு கூறப்பட்டவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளை
ஆய்ந்தறிக. 

பாலிமொழியும் புனைமொழியே என்பர்.  புத்த மத போதம்
பரப்ப அது தேவையாய் இருந்தது.  தருமம் என்ற சொல்லை
ரு எடுத்துவிட்டு தம்மா என்று மாற்றவில்லையோ?  அதுபோல
கேடுது என்று டுவை வைத்துக்கொண்டு மடுவில் மாட்டி
நாக்கு நலியாமல்  கேது என்று புனைந்தது திறமையிலும்
திறமையே. இத்திறமைகள் வாழ்க.

கருத்துகள் இல்லை: