திங்கள், 23 ஏப்ரல், 2018

குருவி மரத்திலொரு- தந்திரம்

அந்த மரத்திலொரு குருவி — நான்
அறியா ஒலியினில் பாடியதே!
அந்தி மயக்கினிலே நழுவி — மனம்
அங்கு கவனத்தில் ஓடியதே.

என்ன இசையிது சொல்வாய் — என
யானும் ஆவலொடு கேட்டுநின்றேன்;
உண்ணப் பூச்சிபுழு கொல்வேன் –அவை
ஓலம் இட்டவொலிப் பாட்டென்றதே.

தனது செயலைப்பிறர் மேலே– போடும்
தந்திரம் உனக்கும் வந்ததுண்டோ?
மனிதர் என்பவரைப் போலே — சென்று
மாறும் அடிச்சுவடு முந்தியுண்டோ?

sivamala

கருத்துகள் இல்லை: