ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

கத்தியும் சத்திரியரும்.

கத்தி என்பது  ஒரு பேச்சுவழக்கில் எழுந்த சொல். இந்தச் சொல் கற்காலத்திலிருந்து தமிழில் வழங்கிவரும் சொல் என்பது  அதன் அமைப்பைப் பார்த்தால் நன்' கு புரிந்துகொள்ளலாம்.

இந்தியக் கற்காலமென்பது ஏறத்தாழ கி.மு. 1200க்கு  முந்தியது  என்பர். ( Before  Circa 1200 BCE -  1000 BCE. ).  முதலில் பொன்னைக் கண்டுபிடித்தார்களா இரும்பைக் கண்டுபிடித்தார்களா என்றால்,  பொன்னையே என்று ஊகிக்க வேண்டும். சொல்லாய்வுப் படி  இரும்பின் பெயர் "இரும் பொன் " என்பதன் திரிபு.  பொன்னை அறிந்தபின் இரும்பை அறிந்தபோது அதைப் பெரிய பொன் என்றனர் தமிழர்.  இரு (ம்) -  பெரிய. பொன் . -  சற்றுக் கலப்பான தங்கம். தூய தங்கம் சீனர்கள் பயன்படுத்துவர் .

இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்த அறியுமுன் தமிழர்கள் கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.  கூரான கல்லைக் கொண்டு, தமக்கு வேண்டிய பொருள்களைப் பிளந்து துண்டுகளாக்கினார்கள்.  ஒரு பொருளைப் பகுத்துத்  துண்டாக்குவதற்குப் பயன்படுத்திய கல்லே கத்தி ஆனது.

கல் >  கல்+தி >  கல்த்தி >  கத்தி.

கத்தி பிற்காலத்து இரும்பால் செய்யப்பட்டது.  கல் என்ற சொற்பகுதி மறக்கப் பட்டது .  அது நல்லதே.

( சேலை என்ற சொல்லுக்குப் பொருள் மரப்பட்டை என்பது.  இப்போது நூலால் செய்து அணிந்தாலும் பெயர் அதுதான்.)

( சறுக்கி அருகில் செல்வது  சறுக்கரம்.  பின் உருளையால் அமைந்தாலும் அது சறுக்கரம் தான்.  அது சக்கரம் என்று திரிந்தது. )

இச்சொல்லில் இருக்கும் ல் என்ற ஒலி தி என்ற விகுதியின் வரவுக்குப்பின் ஒரு தடைபோலுமிருப்பதால் அது விலக்கப்பட்டது. இப்படித் தகர வரவால் லகர ஒற்று  மறைந்த சொற்கள் பலவாகும். (  நமது முன் இடுகைகளைப் படித்துப் பட்டியல் போட்டுக்கொள்ளலாம் ).

கல்+தி > கற்றி > கத்தி என்று காட்டினும் அதே.

வெற்றி என்ற எழுத்துமொழிச் சொல் வெத்தி என்று பேச்சில் வருவது போலுமாம்.  சிறு அம்பலம் என்பது சிற்றம்பலம் ஆகிப் பின் சித்தம்பலம் > சிதம்பரம் ஆகிவிட்ட திரிபுகளையும் அறிக.  அம்பரம் என்பதை ஈண்டு விரிக்கவில்லை.

கத்தியிலிருந்து யாமெடுத்துக்கொளவது கத்திரியர் என்ற சொல். இதுபின் சத்திரியர் என்று மாறி அயல் நூல்களுக்கும் சென்றது.

கத்தி கொண்டுபோராடும் தொழிலை மேற்கொண்டோர்,  கத்திரியர்.
கத்தி + இரு + இ + அர்.   கத்திரியர்,  பின் சத்திரியர்.   இதன் முன்பொருள் கத்தியுடன் இருப்போர் என்பது.  க - ச  திரிபு .   சேரலர்  >  கேரளர்  என்பது உதாரணம் .

கத்தியுடன் இருப்பவனைக் குமுகம் ஒருகாலத்தில் உயர்வாகக் கருதவில்லை.  இந்தக் காலம் மனுவின் காலத்துக்கு முன் ஆகும்.  மேலும் இறைவனை உணர்ந்தோர் போல் இவர்கள் அமைதியான குணம் உடையவர்களாகவும் இருக்கவில்லை.  கொலை முதலியன செய்ய அவர்கள் தயங்கியதும் இல்லை. "  மண்டை ஓடுகளின் மேலே நடந்து மண்டலத்தை ஆண்டவர்கள் " என்று கவியரசு கண்ணதாசன் எழுதியது இவர்களைப் பற்றித்தான். ஆனால் சட்டத்துறை அறிஞர்கள் தம் சிந்தனைக் கட்டுரைகளில் சொல்வதுபோல் முதலில் வலக்காரத்தால் நாட்டையே அலைக்கழித்தாலும் இறுதியில் அமைதியை நிலை நாட்டி, ஆட்சியை ஏற்படுத்தி முடி சூடியபின் ஒழுங்கை நிலைநாட்டிவிட்டால் கத்திரியர் ( கத்தி வைத்திருந்தாலும் குண்டுகள் வைத்திருந்தாலும் )  அல்லது ஆயுதபாணிகள்  அரசர்களாய்
உயர்ந்துவிடுகிறார்கள் என்பதை அறியவும். (When social order sets in and peace prevails,  legitimacy returns. )

குழப்பமான காலங்களில் நீதி  சட்டம் ஒழுங்கு என்பவை நிலை நாட்டப் படுதல் பற்றி இங்கிலாந்தின் டென்னிங் பிரபுவும்  பிரபுக்கள் அவையும் தந்த நீதி  முடிபுரைகள் சிந்தனைக்  கருவூலங்கள். (Lord Denning M R in the English Court of Appeal and House of Lords on a Rhodesian case ).  ஒரு காலத்தில் கெட்டது  இன்னொரு காலத்தில் நல்லதாகிவிடும்.

அச்சமே இல்லாதவனுக்குக் கத்தி எதற்கு?  இந்த வகையில், கத்தி இருப்போர் அச்சமுள்ளோர்.   இரிதல்:  அஞ்சுதல்.  இரிபு:  அச்சம். இன்னும் பிற பொருளும் உள்ளன.

ஆகவே கத்தி + இரியர் என்பதை  கத்தியுடன் அஞ்சி நின்றோர் என்றும்  பொருள் கொள்ளவேண்டும்.

இருப்போர் அச்சமுள்ளோர்.  பணம் இருப்போர் அஞ்சுவர்.  கத்தியிருப்போர் அஞ்சுவர்.

கத்தி + இரு  அல்லது கத்தி இரி என்று எப்படிக் கொண்டாலும் பொருள் அதுதான்.  கத்தி வைத்துக்கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள்.

நாம் கத்தி + இரு + இ + அர்  என்பதையே இங்கு கொள்கின்றோம்.

சத்திரியர் என்ற சொல்லுக்குச்  சரியான பொருள் தமிழே தரும்.

In the end:  அச்சத்தைப் போக்கியது  ஆட்சியை ஆக்கியது கத்தி

அறிக மகிழ்க.

மெய்ப்பு  - பின்னர்.

கருத்துகள் இல்லை: