வியாழன், 8 பிப்ரவரி, 2024

நாகர் பற்றியவை

 நாகர் என்றால் நாகத்தை வணங்குவோர் என்று கூறிய அறிஞர்கள் உள்ளனர்.  நாகர் என்று தங்களைப் பெயரிட்டுக் குறித்துக்கொள்வோரும் உள்ளனர். நாகபட்டினம், நாகூர், நாகர்கோயில், நாக்பூர், நாகாலாந்து, நாகரினம் என்று பலகுறிப்புகள் உண்மையால்,  நாகவணக்கம் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்கள் பெரும்பாலும் நாவலந்தீவகற்பம் முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் என்று தெரிகிறது.பலசாதிகளுக்குள் கலந்துவிட்டவர்கள் என்றும் தெரிகிறது. தங்களின் வெண்மஞ்சள் தோல் நிறத்தையும் பரப்பிவிட்டனர். சோழமன்னன் வெல்வேள் கிள்ளி  என்பவன் பீலிவளை என்ற நாகக் கன்னிகையை மணந்தபின் இவர்கள் தம்முள் கலப்பதைத் தமிழர்கள் வரவேற்றனர் என்று தெரிகிறது.  தமிழ்ச் சாதியர்களில் கலப்பின்மை இல்லை என்பதே உண்மை.  தமிழருள் மட்டுமின்றிப் பிற  தென்னிந்திய வட இந்தியக் குலங்களிலும் இவர்கள் கலந்துள்ளனர்.

நாகர் எங்கும் பரவியுள்ளமையால்,  அவர்கள் இந்தியாவெங்கும் நகர்ந்து திரிந்தவர்கள் என்பதே சரியாகும். நாகர் என்ற சொல்:

நகர்(தல்) >  நாகர் என்று முதனிலை நீண்டு அமைந்த பெயர்.  இதற்குரிய வினைச்சொல் நகர்தலே. ( நகர்பவர்கள் , ஓரிடத்தில் அமையாதவர்கள்.). வினையடித் தோன்றிய பெயர்களையும் பெரிதும் வினை என்றே குறிக்கின்றோம்.

நாகம் என்ற சொல்லும் நகர்தல் என்னும் வினையடியாய்த் தோன்றியதே. 

நகர் >  நாகர்.   ( அர் என்ற பலர்பால் விகுதி):  சுடு > சூடு என்பதுபோல் தலை எழுத்து நீட்சி.

அ டிச்சொல்   நகு என்பதே.  இதில் கு என்பது சேர்விடம் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்.

சிரிப்பது, நடப்பது, இடம்பெயர்வது எல்லாம் அசைவு குறிப்பன,  ந என்பதே அடிச்சொல்.  உல் >நுல்> நல் > ந.

நாடுதல் என்பது முன் உள்ளதை நோக்கிய ஈர்ப்பு அல்லது  முன் நகர்வு.

நுல் > நூல்.  ( துணியில் நுழைவது )

நுல் > நுழை.  நுழைதல்.

நுல் > நல் > நட.  நடி, நடம், நடனம்.

நடி > நாடி:  அசைவது.

நகு >  நகு அர் > நகர்.  (  நகர்தல் ).

நகு > நகல்

.  ( ஒன்றிலிருந்து புறப்பட்டுப் படியமைதல் ) 

நகர் > நக(  ர்)   > நாகம்  ( அம் விகுதி)

ந - ( அசைந்து),  கு  ( சேர்விடத்து).  அ - ( அங்குப் போ).  

= நக + அரு >    [ அருகில்)

நக+ அரு+ தல் >  நகருதல்.

ஓப்பீடு  சீனம்:

纳     பெற்றுக்கொள்.  ( அசைவு).   அப்புறம்  ( நிகழ்வு)     "நா"  (ஒலிப்பு)

ஆதியில் தமிழ், சீனமொழிபோல்,  ஓரசைச் சொற்க்ளைக் கொண்டு இலங்கியது.  பின் சொற்கள் வளர்ந்தன.

அசைந்து முன் செல்வதே நல்லது.  அதனால் நன்மைக் கருத்து அசைவுக் கருத்தில் தோன்றியது.   அறிக.  பழம் இருக்குமிடத்துக்கு அசைந்து சென்றுவிட்டால் பழம் கிடைக்கும். பழம் நல்லது.  உணவு ஆதலின்.


சமஸ்கிருதம் அல்லது சந்தாசா என்பது சந்த அசைவு உள்ள பூசை மொழி.  இந்தோ ஐரோப்பியம் என்பது அவர்கள் அணைத்துக்கொண்ட இந்தியப் பூசாரிப் பாடை.  பாடு+ ஐ:  பாடை, பாடுமொழி. அவர்கள் அதிலிருந்து பல சொற்களை எடுத்துக்கொண்டனர்.  பாடை>  பாஷா.   மூலச்சொல் பாடை என்பதுதான்.

நாகர் என்ற சொல்லுக்குத் தமிழில் விளக்க அமைவதற்குக் காரணம்,  இவர்களை இப்படி அழைத்தவர்கள் தமிழரென்பதுதான்.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


கருத்துகள் இல்லை: