வியாழன், 25 ஏப்ரல், 2019

பிராந்தியம்

இன்று பிராந்தியம் என்ற சொல்லை ஆய்வோம்.

இந்தத் திரிசொல் தமிழ்ச் சொல் போல் தெரிகிறதா என்றால் இல்லை. செந்தமிழ் ஒலிமரபை இச்சொல் வெளிப்படுத்தவில்லை.

ஒரு மன்னனின் ஆளுகைக்கு உட்பட்டது அவனுடைய  நாடு எனப்படும். அவனுடைய நாட்டைச் சுற்றியுள்ளனவும் பதிலரையர்களை  ஆட்சியர்களாகக் கொண்டவையுமான மற்ற நிலப்பகுதிகள் "பிராந்தியங்கள்" எனப்பட்டன.

இந்தச் சுற்றுவட்ட நிலப்பகுதிகளை இந்த மன்னன் கைப்பற்றி அவற்றினின்று நீங்கியவனாய் அந்த ஆட்சியர்களிடமிருந்து இவன் பொருளைப் பெற்றுக்கொண்டபடியால் அவையும் இவனின் நேரல்லாத ஆளுகைக்கு உட்பட்டவையே ஆயின.

இந்த மன்னனின் மக்கள் அந்தச் சுற்றுவட்டங்களை " பிறவாம் தேயம்" என்றுதான் சொல்லமுடிந்தது.  பிரிட்டீஷ் மக்கள் இந்தியா முதலிய நாடுகளைக் "காலனி"கள்  ( குடியேற்றங்கள் )  என்று கூறியது போலவே யாம்.

பிறவாம்தேயம் >  பிறாந்தீயம் >  பிராந்தியம்.

பிறவாம் :   பிராந்   ( ற  - ர;   வா: கெட்டது;   அல்லது விலகிற்று.    ம் >ந்  புணர்ச்சித் திரிபு. )
தேயம் :  தீயம் > தியம். >  த்யம்   ஏகார ஈகார மாற்றம்.

எலாம் திரிபுமயமே.

சங்க காலத்தில் தேயம் என்ற சொல் தேம் என்று இருந்தது.

தேம் >  தேயம் ( ய என்பது எழுத்துப்பேறு )  >  தேசம்  ( ய ச போலி ) > தேஷ்.

பிற என்பது சொல்லில் பிரா என்று மாறுவது:  எடுத்துக்காட்டுகள்:

பிற அணி >  பிறாணி > பிராணி. ( மனிதரல்லாத மற்ற அணி உயிர்கள் ).
பிராணியின் உள்ளிருப்பது:  பிராணன்  > பிராணா.

பிறகு ஆர் அம் =  பிரகாரம்.
பின்புறத்தில் அல்லது வெளிப்புறத்தில்  சுற்றியுள்ள இடம்.  ஆர்தல்: சுற்றியிருத்தல். மூலத்தானத்தின் பின்னர் சுற்றுவட்டம் முதன்மையான இடம்.
ஒரு பூசாரி கோவிலின் மூலத்தானத்திலிருந்து வெளிப்பட்டுப் பின் பிரகாரத்துக்கு வந்து அப்புறம் வெளியிற் செல்லுகின்றனன்.

புறக்கட்டு:    புற + கு + ஆர் + அம் = புறகாரம் > பிரகாரம் எனினுமாம்.

புறம் : புற (எச்சச்சொல்.)

இவ்வளவுதான். மீண்டும் கண்டுரையாடுவோம்.







கருத்துகள் இல்லை: