ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

ஐயப்ப சாமி பாடல்

ஒரு சிறிய பாடல். இது ஐயப்ப சாமியைப் புகழ்வது:


ஐயப்பனின் மகிமைதனைப் புகழும் வாய்களே  -- இந்த
அகிலமதில் இனியவாழ்வு பெறுவ துண்மையே.

கொய்தணிந்த உனதுமாலை மணமும் வாழ்விலே -- இங்கு
கூடிவரும் நாடிவந்த பத்தர் காணவே.

காலையிலே கருதியவை மாலை நேரமே --- ஒரு
சோலைமலர்ச் சோபனத்தில் மெய்விளங்குமே.

சபரிமலை மகிபன் தனைப்  புகலும் வாய்களே ---ஒரு
தணிந்திடாத ஒளியைச் சேர்க்கும் தரணி போற்றவே.


பொருள்:

புகலும் =  சொல்லும்.  புகுமாறு தெளியச் சொல்லுதல்.
மெய் = உண்மை
சோபனம் :  அழகு.
காணவே = இங்கு மனத்தால் உணர்தல்.


 





கருத்துகள் இல்லை: