சனி, 17 ஜூன், 2023

விகாரம் பதம் என்பவை

 

விகாரம் என்ற பதம் தமிழ்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.

இதன்  முந்துவடிவம் :  மிகாரம் என்பது.

இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)

இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.

மிகுதல் என்பதன் பொருளாவன:

அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.

ஆர்தல் என்பதன் பொருளாவன:

நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.

மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.

எடுத்துக்காட்டு:  மிஞ்சுதல் -  விஞ்சுதல்.  மினவுதல் -  வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   வ>< ம.
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்;
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.

மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்.  விரட்டு என்றும் திரியும்.

மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்.  மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சி:  எழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொற்கள். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்.  எ-டு:  மயங்குவது >  ம(யங்குவ)து = மது.  இதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன. 
சிறப்படைந்த நிலை:  தப்பு + அம் >  தபு அம் >  தபம் > தவம்.  உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்.  தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனது,  பின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.

விபுலானந்தம் :  விழு புலம் ஆனந்தம்:   வி + புல + ஆனந்தம்;  இது விழுமிய அதாவது சிறப்பான;  புலம் -  புல.  மகர ஒற்று கெட்டது. நிலப்பகுதி அல்லது பாங்கு என்பது பொருள்.  சிறப்பான இடத்து ஆனந்தமாய் இருத்தல்.  இதில் விழுபுலம் என்பது விபுல என்று இரு கடைக்குறைகள் வர,  வருமொழியாகிய ஆனந்தம் இயல்பாய் நின்றது.

ஓரிரண்டு எழுத்துக்களை எடுத்துவிட்டாலே படிப்போன் அல்லது கேட்போன் தடுமாறிவிடுவான்.

இந்தோனேசிய மொழியில் அபாங்  சொகர்னோ என்ற பெயர் புங் கர்னோ என்று சிறப்பெய்தியது காண்க.  முகம்மது சாலே என்ற பெயர் மாட்சாலே என வருதலும் கொள்க.  பிறகு வெள்ளைக்காரர்களுக்குப் பொதுப்பெயர் ஆனது.

இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்;  ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படலாயிற்று. பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.

வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.

வி + கு + ஆரம் என்றாலும்.  வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.

மிகுதி > விகுதி என்றாலும்,  வி + (கு) + தி =  விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.

மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் ,  மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்;  வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.

வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியது;  அது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.

cf MEng variance, variaunce, fr OFr  variance  Anglo-Latin variaunce, veriaunce, wariaunce; Latin variantia.

வேறு  >  வேற்று >  வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே >  வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.

வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்,  வி >வே.

எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?

விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.

பதி + அம் = பதம்:  பொருள் பதிந்தது; பொதிந்தது.

அறிவோம்; மகிழ்வோம்.

கருத்துகள் இல்லை: