சனி, 24 ஜூன், 2023

அந்தகன் ( எமன்) என்ற சொல்

 "அந்தகன் வரும்போது அவனியில் யார்துணை"  என்று  பிறப்பு இறப்பு மறுபிறப்பு  பற்றிய ஆய்வுரைகளின்  பொழுது  பேச்சாளர் வினவுதலுண்டு.  அந்தகன் என்றால் எமன் என்பது  நீங்கள் அறிந்துவைத்துள்ளதே. அப்போது தெய்வத்தைச் சிந்திக்கவேண்டும்  என்பது பதிலாக வருவது.  நாம் அலச வேண்டியது இச்சொல்லின் அமைப்பினை.

முன் இதனை நேராக ஆய்வு செய்யவில்லை என்றாலும்,  தொடர்புடைய கருத்துகளை ஆய்வு செய்துள்ளோம்.  அவற்றுட் சில அடிக்குறிப்பாகக் கீழே தரப்பட்டுள்ளன.  நேரம் இருப்பின்  அவற்றையும் படித்தறிந்துகொள்க.

இன்று  அறுந்து  என்ற எச்சவினைச்சொல்லிலிருந்து புறப்படலாம்,

அறு என்ற வினையும்  அறுந்து என்ற எச்சமும் கூட  முடிவு என்ற பொருளையே குறிப்பனவாகும்.   முன் இடுகைகளில் பல எச்சங்கள் ஆங்காங்கு காட்டப்பட்டுள்ளன.  அவ்வாறு இங்கும் காட்டப்பெறும்.  

ஆண்டவன் என்ற சொல்லுக்கும் அவ்வாறு காட்டப்பெறும்.  ஆண்டு + அவன் என்பது ஆண்டவன் என்றாகும். ஆண்டு என்பது எச்சவினை,  இங்கு பெயரெச்சம் ஆகும்.  இவ்வாறன்றி  ஆள் + து+ அ + அன் என்றும்  வினைச்சொல்லிலிருந்தும் காட்டலாம்..  இவற்றுள் தெளிவுறுத்துவது எது என்று நாம்தாம் அறிந்துகொள்ள வேண்டும்.  எதனால் எது நன்கு  விளக்கமுறுகிறதோ அதையே பற்றிக்கொள்வதில்  வழுவொன்றும் இல்லை..

இதனால்,  அறுந்து என்பதை மேற்கொண்டு,   று என்ற எழுத்தை நீக்கிவிட்டால், அது அந்து என்று வந்துவிடும்.இலக்கணப்படி இது இடைக்குறை. தொகுப்பு எனினுமது.  அந்து + அகம் + அன் =  அந்தகன் ஆகிறது.  எமன் என்பவன் நமக்கு இறப்பு விளைவிப்பவன்.  இவன் நம் உள்ளிலே உலவுகின்றான்,  இவற்றை நாம் நோய்நுண்மிகள் என்றும், கிருமிகள் என்றும் கூறுகிறோம். இது அணிவகையாகச் சொல்லப்பெறுவது.   திரிபு:  கரு >கிரு.  கிருட்டினபட்சம்,  கறுத்த பாகம்  என்பது காண்க.  கரு >  கிரு> கிருமி என்பதும் அங்கனம் விளைந்த சொல்லே.

பிறப்பு என்பது அறும் தன்மை உடையது.   ஆகவே  அறு என்ற வினையினின்று புறப்படுதல் ஒரு சிறப்பை உடையது .  எமனும் உள்ளேயே உள்ளான்;  ஆதலின் அகம் + அன் > அகன் என்பதும் பொருட்சிறப்பு உடையதாகிறது.

பாலி,  சமத்கிருதம் முதலிய மொழிகளில் எச்சவினைகளிலிருந்து சொல்லாக்கம் காட்டுவர் புலவர். அதுபோலவே இங்கும் காட்டப்பெறுகிறது. இது எளிதிற் புரிவித்தல் என்னும் உத்தியாகும் என்பதறிக.   

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்


அடிக்குறிப்புகள்:

அந்தம் அன்று முதலிய:

https://sivamaalaa.blogspot.com/2021/08/blog-post_15.html


கருத்துகள் இல்லை: