ஞாயிறு, 2 ஜனவரி, 2022

என் இயமானர் ( நாய் சொல்வது)

 


ஒரு சிறுநாய் பாடும் கவி:-

என்னை அழைக்கிறார் இந்த மூத்தவர்

இவரிடம் நான்போக மாட்டேன்

என்னை அணைத்திடும் என்இய மானர்

இந்தவீட் டுள்ளிலுள் ளாரே!

என்னிடம் வருவார் உண்டிடக் தருவார்

பட்டையப் பம்பகிர் வாரே

தண்உறு நீரைத் தவிப்பது தீர

தந்திடு மன்னவர் வருக வாழ்க.



இயமானர் - எசமானர்

பட்டையப்பம்- பிஸ்கட்

பகிர்வார் - பகுதிகளாகத் தருவார்

தண்உறு - குளிரடைந்த

தவிப்பது தீர - தாகம் தீர

மன்னவர் - அரசர்.


எஜமான் என்னும் சொல்:  இங்குச் சொடுக்கி வாசிக்கலாம்: 

https://sivamaalaa.blogspot.com/2018/09/blog-post_18.html


கருத்துகள் இல்லை: