வெள்ளி, 14 ஜனவரி, 2022

மாட்டுப் பொங்கல் வாழ்த்து

 மறுநாளில் பொங்கலுக்கு மாட்டுப் பொங்கல்

மருவியதை வரவேற்போம் மதித்துப் போற்றி,

ஒருநாளும் நாம்மறவோம் உழவர் தம்மை,

உலகுதனக் குணவூட்ட உழைப்போர் அன்னார்,

வெறுநாளாய் உழைப்பின்றி வீண்செய்  வோரை

வெறுத்திடுங்கள் என்றறைந்தான் பெரும்பா வல்லோன்,

நிறுவியதோர் வாழ்வென்றால் ஏர்வாழ் வொன்றே, 

நின்று அதனை வணங்கிடுவோம் இன்றே நாமே.


ஏரென்று  சொன்னாலே மாடின்றி  இல்லையால்

ஊர்கூடித் தூக்கும்  அது.

 

ஏர்வாழ்வு - உழவர் வாழ்வு.

மருவி அதை -  அதைத் தழுவிக்கொண்டு,  ஏற்றுக்கொண்டு,

என்றறைந்தான்  -  என்று சொன்னார்

பெரும்பாவல்லோன் -  மகாகவி பாரதி.

நிறுவிய -  நிலைத்த,  நிலைநாட்டப்பெற்ற.

ஏர்வாழ்வு - உழவர் வாழ்வு

நின்று  -  உடற்பணிவு செலுத்தி.

வணங்கிடுவோம் - மனத்தாலும் போற்றுவோம்.

இல்லையால் = இல்லாததனால்.

தூக்கும் - போற்றி உயர்த்தும்.


மெய்ப்பு  பின்னர்.

கருத்துகள் இல்லை: