வெள்ளி, 14 ஜனவரி, 2022

கவிதைப் பொருள்:


கவிதை உள்ள இடுகை  https://sivamaalaa.blogspot.com/2022/01/blog-post_14.html

முதற் கவிதையின் பொருள்:

கொரனாவின் பிடியினிலே விடியல் இன்றி  --- நோய்த்தொற்றில் பட்டுக்கொண்டதால் விடுபாடு ஏதும் இல்லாமல்,

கொலைப்பட்ட பெருமக்கள் தொகையைக் கூற   ----  ஒவ்வொரு நாட்டிலும் இறந்துவிட்டவர்கள் கணக்கை ஒப்புவிக்க,

ஒருநாளில்  இயலாதே சரியாய் -----  ஒரே நாளில் சரியாகச் சொல்லிவிட முடியாது;

நாமும் ஒளிந்தாளும் முறையன்றி வேறொன் றில்லை  --  இத் தொற்றிலிருந்து தப்பிக்க நாம்  அறைக்குள் ஒளிந்துகொண்டு  தொடர்பின்மை கடைப்பிடித்துக்கொண்டு  இருத்தல் தவிர வேறு வழியில்லை.

திருநாளும் வேண்டாத தியாகம் செய்து   ---- பண்டிகை முதலியவற்றுக்கு வீட்டிலிருக்கும் விடுபாடு இன்றி,  தாம் விட்டுக்கொடுத்து,

தினந்தோறும் சேவைசெயும் தாதி மாரை  -- ஒவ்வொரு நாளும் சேவையாற்றும் தாதியரை,

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே -  அவர்களின் அரிய செயலுக்குப் போற்றுவதைத் தவிர,

பெரிதென்று நாம்  அவர்க்குச் செய்வ தென்னே.  ---  நாம் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்துவிட முடியும்?

மொத்த எண்ணிக்கையில் எத்தனை பேர் இறந்தனர் என்று தெரிந்துவிட்டால், பிழைத்தோர் தொகை தெரிந்துவிடும்; தாதிமார் சேவையும் நாம் அறியக்கூடும்.  நோயின் தாக்கமும் எத்தகையது என்று நாம் தெரிந்துகொள்ளலாம்.


இரண்டாவது கவிதையும் அதே பொருளைத்தான் சொல்கிறது. இதன் சில சொற்களுக்குப் பொருள் அறிவதே போதுமானது:-


முடிநோயின் ---  கொரனா

பிடியினிலே  ---  கடுந்தொற்றிலே 

 விடியல் இன்றி   - விடுபாடு இன்றி

முடிந்தோய்ந்த --இறந்துவிட்ட

 நாம்காண்  -   நாம் கண்டுபிடித்த

மூடறைவாழ்  முறையன்றி  ----  "குவாரண்டீன்" என்னும் தடுப்பறைக்குள் இருப்பதன்றி,   மூடு அறை -  கதவு மூடிப் பிறர் நுழைய இயலாத அறை 

 முன்னொன் றில்லை!   -- நம் முன் வேறு வழியில்லை.

விடுநாட்கள் வேண்டாத  ---  விடுமுறைகள் எடுக்காத

வெல்லீ    கத்தால்  -  வெல்கின்ற தியாகத்தால்   (வெல் ஈகத்தால் )

வேறுபடாச் சேவைசெயும்   --   யாவரையும் சமமாக நடத்தும் சேவையைச் செய்யும் 

தாதி மாரை  ( நர்சுகளை )

அருஞ்செயற்குப் போற்றுதலே அன்றி வேறே  - அரிய செயலுக்குப் போற்றுவதன்றி மற்ற,

ஆனபெரி தவர்க்கேநாம் செயலும் யாதோ.---- அவர்களுக்கு நாம் செய்யும் கைம்மாறு  ஒன்றுமில்லை


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்


கருத்துகள் இல்லை: