திங்கள், 3 ஜனவரி, 2022

ரம்மியம் என்பது

 ஒ ருவன் தன் வீட்டின் முகப்பை இடித்துவிட்டு, அடுத்த நாள் வந்து பார்த்து என் வீடு இதுவன்று என்று சொன்னதுபோலவே, பல சொற்கள் தமிழில் உலவுகின்றன.(அ)/றணம் என்ற ஒரு சொல்லை முன் ஓர் இடுகையில் கண்டோம். இப்போது இரம்மியம் என்பதை அறிந்துகொள்வோம்.

இர் என்ற அடிச்சொல்,  இருள், இரவு, இராவணன் முதலிய சொற்களில் வந்துள்ளது. இர் என்ற அடி, ஒளியின்மையை உணர்த்துவது.  கருமை ஒளியின்மையுடன் தொடர்புள்ளதாதலின்,  இர் என்பது கருப்பு நிறத்தையும் உணர்த்தும்.

இர் -  கருப்பு.

அம் -  அழகு.

இ  -  சுட்டுச்சொல்,  இடைநிலையாய் வந்துள்ளது.

அம் -  விகுதி.   பெரும்பாலும் அமைப்பு என்பதைக் குறிக்கும் சொற்களில் வரும். அமைப்பு என்பதற்கும் இது அடிச்சொல் ஆகும்.  அறம் ( அறு+ அம்) என்பதில் இவ்விகுதி வந்துள்ளமை காண்க.  மறம் என்பதிலும் அது உள்ளது.

முன் தமிழர் கருப்பில் அழகு கண்டு சுவைத்தனர் என்பது இச்சொல்லிலிருந்து நாம் அறிந்துகொள்வதாகும். ஒரு நூறு ஆண்டுகட்குமுன் கருப்பு நிற உந்து வண்டியை மக்கள் பெரிதும் விரும்பி அதில் அழகும் கண்டனர் என்று சொல்கிறார்கள்.. இப்போதெல்லாம் பல வண்ணங்களில் உந்துவண்டிகள் வருகின்றன!  ஐயப்ப பற்றர்கள் கருப்பு உடையில் அழகு உணர்ந்தவர்கள். வானம் பாதிநாள் (இரவில்) கருப்பிலே அழகு காட்டுகிறது.  கண்ணின் ஒளியல்லால் மற்றோர் ஒளியில்லை என்றாள் நம் ஓளவை.

இர்+ அம் + இ+ அம் > இரம்மியம்,   பொருள்:  அழகு.

நாளடைவில் கருப்பில் அழகு என்பதை மறந்துவிட்டனர்.

இராமன், இராவணன், கண்ணன், காளி யாவரும் கருப்பிலழகியர்.

ஆகவே, ரம்மியம்  உண்மையில் இரம்மியம் ஆகும்.  இது ஒரு பேச்சுவழக்குச் சொல். இப்போது வழக்கு குன்றிவிட்டது. இதை எடுத்தாண்ட மொழிகள் இச்சொல்லை இறவாது காத்துள்ளன.  அவற்றுக்கு நன்றி.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.



கருத்துகள் இல்லை: