வியாழன், 27 ஜனவரி, 2022

மாத்திரம் என்ற சொல்.

 மாத்திரம் என்ற சொல்லும் தமிழ்ப்புலவோரால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத சொல்லாய்ச் சிலகாலம் இலக்கிய உலகில் வலம்வந்த சொல்லாகும். தமிழில் இதுவரை கிடைத்துள்ள பழைய நூல்களில் இச்சொல் அருகியே வழங்கியுள்ளதென்று தெரிகிறது.  கலித்தொகை என்ற பழைய நூலில் "முயங்கு மாத்திரம் " என்று இந்தச் சொல் வந்துள்ளது.

மேலும் சிற்றூர்களிலும் " மாத்திரம்" வரைவிலாத வழக்குடையதாய் உள்ளது. ஊர்களில் உள்ளோர்  ஐரோப்பாக் கண்டத்துக்குத் தொடர்பு இல்லாதவ  ரென்பதால், மாத்திரம் தமிழன்று என்றபால வாதினை ஏற்றல் இயல்வில்லை.

சமத்கிருதம் என்பது மேல்நாட்டிலிருந்து வந்தது என்பதை ஏற்பதற்கில்லை. அது இந்திய மொழியே ஆகும்.  தமிழரே உரோமாபுரிக்குச் சென்று தமிழ் மற்றும் சங்கதச் சொற்களை இலத்தீன் மொழியமைப்புக்குத் தந்துதவினர். இவ்வாறு ஒரு வரலாற்றாய்வு கூறுகிறது.  ( மயிலை சீனி வேங்கடசாமி ). மேலும் மிகப் பழங்காலத்தே மேலை நாடுகளில் சென்று குடியேறியுள்ளனர். அவர்கள் மெசொபோட்டேமியாவிலும் வாழ்ந்தனர்.  அந்தச் சொல் அமைந்த விதத்தை இங்குக் கூறியுள்ளோம்:

https://sivamaalaa.blogspot.com/2017/05/blog-post_16.html

இனி, வால்மிகி ஒரு சங்கதக்கவி, அவர் தமிழிலும் பாடியுள்ளார்.  வான்மிகி என்பது வானின் மிக்கவர் என்று பொருள்தரும் தமிழ்ச்சொல்.  வியாசன் தமிழ்மீனவவழியினன்.  பாணினி ஒரு பாண குலத்து இலக்கண அறிஞன்.  இவர்களிலெவரும் பூசாரி வழியினர் அல்லர். 

சமத்கிருதம் என்பதன் பழைய் பெயர் சந்தாசா ( சந்த அசை).  சந்தம் நல்கும் அசைகளை உடைய இந்நாட்டு மொழி.

திர் என்ற அடியிலிருந்தே  திரள் முதலிய சொற்கள் வருகின்றன. திறம் என்பது செயல்திரட்சி குறிக்கும் சொல்.  திரம் என்பது  பொதுவாகத் திரட்சி குறிக்கும் சொல்.  திர்> திர அம் > திரம்,  திர+அள் > திரள். இவற்றுடன் உறவுடைய சொற்கள் பலவாகும்.

இவற்றை மேலும் அறிய விரும்பினால் பின்னூட்டம் இடுங்கள்.

மா என்பது அளவு என்று பொருள்தரும் சொல்.  திரம் என்பது திரட்சி குறிக்கும் பின்னொட்டு.

மாத்திரம் என்பது திரண்ட அளவு என்பதன்றி வேறன்று.

இதுகாறும் சுருங்கக் கூறியவற்றால், மாத்திரம் என்பது தமிழென்பது தெளிவு.

" இம்மாஞ்சோறு என்னால் முடிக்க முடியாது" என்ற வாக்கியத்தில் மா  ( இம்மா) என்பது இவ்வளவு என்றே பொருள்படும். "எம்மாம் பெரிசா இருந்தாலும் தூக்கீடுவான்"  என்பதில் எம்மா என்பது எவ்வளவு என்று பொருள்தரும். இதுபோல்வன பிறவும் அன்ன.  மா என்பது பெரிது என்றும் பொருள்படும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.  




கருத்துகள் இல்லை: