செவ்வாய், 25 ஜனவரி, 2022

மூர்க்கன்.

 எதிலும் ஒருவன் தன்  நிற்பிலிருந்து மாறிகொண்டிருக்கக் கூடாது.  அதேவேளையில், மாறுவதற்குரிய தன்மையை நல்லோர் எதிர்நோக்குங்கால், மாறியமைய வேண்டும்.  அதாவது பிடிவாதமும் கூடாது.  எதிலும் நிலைநிற்பதும் மாறுவதும் சிறந்த காரணங்களுக்காக இருக்கவேண்டும்.  மக்களாட்சியில் ஒருவன் பணம்பெற்றுக்கொண்டு வாக்களிப்பது போலும் நிகழ்வுகள் ஒரு குறைபாட்டையே சுட்டிக்காட்டுகிறது.

இது நிற்க, மூர்க்கன் என்பவன் முரடன் என்ற கருத்தும் மக்களிடையே இருப்பதாகத் தெரிகிறது.

அறியாமை என்னும் நிலையில் மூழ்கிக் கிடப்பவனே மூர்க்கன்.  இதுவே இச்சொல்லின் தொடக்கப் பொருளென்பது தெளிவு.  அதாவது அறிந்து கொள்ளவேண்டியவற்றை அறியாமல் தன் போக்கில் தான்  மூழ்கிக்கிடப்பது.

இப்போது சொல்லைக் காண்போம்.

மூழ் >  மூர்.

மூர் >  மூர்க்கன்  என்பது திரிபுச்சொல். பொருளும் அமைப்புக்குப்பின் விரிந்துள்ளது.  நட்பின் திறமறியான் மூர்க்கன் என்பது இதன் இன்னொரு பொருள்.

முரடு என்ற சொல்லுக்கும் முர் என்பதே அடியாதலால் முர்- மூர் என்ற திரிபும் இவ்வாய்வில் இடங்கொள்வதாகும்.

முர் + அடு என்பதனோடு முர்-மூர் என்பதையும் ஒப்புவைத்தல் கூடுவதே. ஆதலின் மூர்க்கன் என்பது ஓர் இருபிறப்பி என்பதையும் மறத்தலாகாது.

முகிழ் என்பதும் மூர் என்று திரிந்து மேற்குறித்த சொல்லுடன் ஒருமுடிபு கொள்ளும்.

முகிழ் > முகிழ்த்தல்  ( தோன்றுதல்).

முகிழ் > ( முகிர் )>(மூர் )> மூர்த்தி,

ஓரிடத்துத் தோன்றி அருள்பாலிக்கும் தெய்வம்.

இதுபோல் அமைந்த இன்னொரு சொல்:

பகிர்தல் வினை.

பகிர்தல் >  பார் > பார்த்துண்ணல் > பாத்தூண்.

பகுத்துண் > பாத்தூண் என்பதும் ஏற்புடைத்தே..


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

 

கருத்துகள் இல்லை: