புதன், 11 மார்ச், 2020

பேச்சில் வக்கணை.

கடிதத்தில் வக்கணையை முன் இடுகையில் கண்டு மகிழ்ந்தோம்.

https://sivamaalaa.blogspot.com/2020/03/blog-post_11.html


அதன் பொருத்தணை மேலே உள்ளது,  ( link )

பேசும்போது நேரிய முறையில் பேசாமல் வழுக்கலாகவும் தேவைக்கதிகமான முறையிலும் பொருத்தமின்றியும் சொற்களைப் பொழிவது வக்கணை. இது விளக்கம் தான்; வரையறவு அன்று.

வழுக்கலாகச் சொற்களைச் சேர்ப்பிப்பது அல்லது அணைப்பிப்பதுதான்  வழுக்கணை ஆதலின்

வழுக்கு + அணை =  வழுக்கணை

இது வக்கணை என்று ழுகரம் இடைக்குறைந்தது.

ழகர ஒற்றும் வருக்கமும் இடைக்குறைவது மிகுதி.

வழு + கண் =  வழுக்கண்,  வழுக்கண்+ அம் = வழுக்கணம்;  வழுக்கண்+ ஐ = வழுக்கணை, பின்  ுகரம் இடைக்குறை எனலும் இன்னொரு விளக்கம். எனினும் இதில் , அண் என்பதற்குக் கண் ( பொருள் :  இடம் ) மாற்று.

வழு -  குற்றம் ;  வழுக்கு என்பது வழு என்று வருவது மற்றொரு நோக்கில் கடைக்குறை.

வழுக்கு+ அண்
வழு + கண்.

வழு என்ற அடியில்‌  வினைச்சொற்கள்:

வழு > வழுவுதல்
வழு > வழுக்குதல்

ழுகரம் இடைக்குறைதல்:

வழுத்துதல்
வாழ்த்துதல்.
சிற்றூர்களில் முன் இதை வாத்துவது என்பர்.

வாழ்த்தியம்   வாழ்த்தி இசைக்கப்படும் இயம்.

வாத்தியம் ஆனது காண்க.

இவை திரிபுச் சொற்கள்.

இயற்சொல் திரிசொல் வடசொல் திசைச்சொல் என்று தொடங்கும் ஒரு
தொல்காப்பிய நூற்பா,  அதை மனப்பாடம் செய்யுங்கள்.  நூற்பா எண் மறதி.

வக்கணை -   புகழுரை பின் காண்போம்.

(இதிற் சில  தட்டச்சுப் பிறழ்ச்சிகள் சரிசெய்யப்பட்டன.  15.3.2020.
பின் மறு பார்வை பெறும்.)
Note:
We are in the fear of  grip of covid19 ( corona virus). But will try to function normally.  Flu is also in circulation.


கருத்துகள் இல்லை: