செவ்வாய், 17 மார்ச், 2020

அரசியலில் ஆதவன்

கீழுள்ள நாலு வரிகள் கொண்ட கவிதை
ஒரு மூன்று ஆண்டுகளின்‌முன்
வேறு நாட்டில் இயங்கிய அரசியல் கட்சியைப் பற்றி‌ வரையப்பட்டது.

இக்கட்சி இப்போது இறங்கிவிட்டது.

ஆம்ஆம் என்றனர் ஆற்றலைப் போற்றி
அரசியல் வானதில்  ஆதவன்  என்றிட

ஏமுற அனைவரும் ஏத்திய கட்சி
இழுபறிப் படுகிற‌‌ தூழலில் சிக்கி.

வாசித்து மகிழுங்கள்.

இவ்வரிகளில் வந்த சில சொற்கள் பற்றி அறிவோம்.5

ஆதவன்:  சூரியனைப் போற்றுவது நம் பண்பாட்டில் உள்ளது. தவ ஞானிகளும்
போற்றினர். தங்கள் தவம் அவனால் ஆகும் என்று   நம்பினர்.
amma left with
ஆ :  ஆகும் .
தவம் :   ஞானிகள் செய்வது.  தவமாவது உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை என்றபடியான நெறிநிற்றலாம்.

தவம் ஆகுவதற்கு உதவுவோன் ஆ+தவன்.  இது முறைமாற்றுச் சொற்புனைவு. இவ்வாறு  புனையப் பெற்றவை பலவாகும்.  இதுபோல் புனைவுபெற்ற இன்னொரு சொல் தபு தாரம்  என்பது...   மா+தவன் > மாதவன் எனற்பால சொல் இயல்பாய் அமைந்தது  ஆகும்.  மாதவன் எனின் பெருந்தவமுடையோன்.

ஆதவன் என்பது காரணச் சொல்.

யாதவன் என்ற சொல் பற்றி இவண் காண்க.

https://sivamaalaa.blogspot.com/2019/11/blog-post_23.ht

யா என்பது இவண் ஆ (  மாடு ) என்பதன் திரிபு.   இதுபோலும் இன்னொன்று  ஆடு > யாடு.    தவர் என்பது தமர் ( நம்மவர்) என்பதன் திரிபு.    இனித் தவர் > தவமுடையோர் எனினும் ஒக்குமென்றறிக.

இது இங்கனம் திரிபுற்றது பொருள்மயக்கு அகற்றிற்று.


கட்சி -  கள் + சி.  இது கள் என்ற அடிச்சொல்லில் தோன்றியது.
கள் +து = கட்டுதல்.  காரணத்தால்
கட்டுண்டு நிற்கும் கூட்டமே கட்சியாகும்.


தட்டச்சு த் திருத்தம் பின்.
மறுபார்வை:  20.3.2020.



கருத்துகள் இல்லை: