வியாழன், 26 மார்ச், 2020

துக்க வீட்டில் மிக்க கவனம் வேண்டும்.

நண்பன் இறந்தாலும் நாட்டுறவோர் சென்றாலும்
முன்பின் அறியார் மறைந்தாலும் ---  பண்பனே
நால்வர்தாம் போதுமே நன்காடு கொண்டுசெல
நீள்வதோ கூட்டமே கேடு.


தொற்றும் மகுடமுகி நோய்நுண்மி  ஆதலால்
குற்றம் செயல்புன்மை வேண்டாமே ---- உற்றார்
உறவென்ப தொன்றைத்தான்  உள்மனத்தால் போற்று
குறைவொன்றும் நாடா துனை.


நோய்வட்டத்தைச் சுருக்கும் பல நடவடிக்கைகளை அரசுகள்
எடுத்துவருகின்றன.  அவற்றுக்கு ஆதரவாக இருந்து விதிகளைத்
தவறாமல் கடைப்பிடிப்பதே நாம் இந்தத் துன்பகாலத்திலிருந்து தொலைவில்
சென்று தப்பிக்கும்  மார்க்கமாகும்.  உடல்நல வழிகளைத் தவறாமல்
பின்பற்றுங்கள்.

கருத்துகள் இல்லை: