ஞாயிறு, 24 ஜனவரி, 2016

அம்மாவாசையும் அயல்சேவையும்

அம் என்றால் அழகு. இந்த அடிச் சொல்லுக்கும் அம்மா என்ற தாய் குறிக்கின்ற சொல்லுக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கின்றது. நாம் தொட்டிலில் கிடக்கும்போது முதன்முதல் நாம் கண்ட அழகு அம்மாதான். அம்மை அழகு.

மா என்பது கரிய நிறம் குறிக்கும் சொல். சற்றுக் குறைந்த கறுப்பினை மா நிறம் என்பதுண்டு. மா>  மால். கரிய மால் உந்தியில் வந்தோன் என்று ஔவையாரின் பாடலொன்றில் வரும் தொடரை நினைவு கூர்க. திருமால் கரியோன், கறுப்புசாமி எனவும் படுவார்.

வாய் என்றால் இடம் என்று பொருள்.  இதில் ஓர் ஐ விகுதி சேர்த்தால் வாயை என்று வரும்.  யகரம் சகரமாக உரிய இடங்களில் வருதலை என் பழைய இடுகைகளில் கண்டு மகிழலாம்.  மறதி என்றால் ஒன்றிரண்டு காட்டலாம்,  வாயில்> வாசல்.  நேயம் >  நேசம், தேயம் > தேசம்.  தோயை > தோசை.  நீருடன் கலந்த அல்லது தோய்ந்த மாவினால்  சுடப்படுவது.  ஆகவே வாயை என்பது வாசை ஆகிவிடும். இதிலேதும் வியப்பில்லை/

இப்போது அமாவாசை என்ற சொல் காண்போம்.

அழகிய கருமை கலந்த இடமாகிவிடுகிறது  அம்மாவாசை தினத்தன்று
நம் ஆகாயம், ஆகாயமே ஆகாசமன்றோ?

அமாவாசையின் போது  அம் மா வாயை நம் வானம். அம் = அழகிய;  மா = கருப்பான;   வாய்  =  இடம்;  ஐ =  விகுதி .

இது பின் திரிந்தது.  அம்மாவாசை >  அமாவாசை. மகரம் கெட்ட இடைக்குறை.

அம்மாவாசை தமிழ் வா(ய் )த்தியார்களுக்குப்1 பிடிக்காது,  அம்மா+ஆசை யா? சீ  அமாவாசை என்று எழுது என்று திருத்த,  அமாவாசை ஆகி, பின் அயல்சேவையும் செய்யத்தொடங்கிகிவிட்ட சொல்லை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சிதானே  ( 1, வாய்த்தியார்  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பார் ,  உப அத்தியாயி  வேறு. என்னே குழப்பம் கற்பிப்போருக்கு ).

தைப்பூசத்தில் மகிழ்வு பொங்குக.

will edit

கருத்துகள் இல்லை: