சனி, 23 ஜனவரி, 2016

"உபயம்"

கோயில்களில் பயின்று வழங்கும் "உபயம்"  என்ற சொல்லினை இப்போது  காண்போம்.

கம்ப இராமாயணத்தில் உபயம், என்ற சொல் ". உவைய முறும் உலகின் "(கம்பரா. நிகும். 156). என்று வந்துள்ளதாக அறிஞர் கருதுவர் . உவையம் என்பதே உபயம் என்றாயிற்று என்பது கருத்து.
அ , இ  உ  என்ற முச்சுட்டுகளில்  உ  என்பது  முன்னிற்றல்  குறிப்பது.

உபயம் என்பது ஒரு வரியையும் குறிப்பதால்,  உபயம்  முன் வைக்கப்படும்  கோயிலுக்கான தொகையைக்   குறித்தது என்பது சரியான கருத்து ஆகும் .

உ >  உவ .
உவ >   உவன்.     ஒ.நோ :  அ > அவன் .
உவ > உவச்சன் =  (முன் நின்று ஓதுபவன் ).
உவ > உவை .
உவை > உவையம் > உபயம்.

முன் நிற்புக்   கருத்துடைய  சுட்டடிச் சொற்கள் இவை.

உவ என்பதில்  வ்  வகர உடம்படு மெய் என்பதுமொன்று. எனின்  உவச்சன் என்பது  உ ​+ அச்சன் =  உவச்சன்  எனல்வேண்டும்,   இங்கு அச்சன் -  தந்தை என்று  கொள்க,  ஓதுவாரைத் தந்தை எனல் பொருத்தமே.   ஐ > ஐயர் எனல்போல.

பயம் என்பது பயன் எனினும் அஃது சரியானதே.  திறம் >  திறன்  என்பதில்  மகர ஒற்று  னகர ஒற்றாயிற்று ,  உ+ பயம் =  உபயம் ,   சொல்லமைப்புகளில்  உப்பயம் என்று வாராமல் உபயம் என்றே இயல்பாக வருதல் முறையே. அன்றி உப்பயம்  உபயம் என  இடைக்குறைந்து வருதலும் எடுத்துக் காட்டலாம். பொருள்  :  கோயிற்   பயனுக்கு முன் வைத்த தொகை என்பதே
இங்கும் பொருள்.

Notes:

Payattal can also mean yielding a certain result,  Vizumiyatu payattal.   is an example.  u+payam thus can mean to yield beforehand,  that is,  setting aside from your yield from fields a portion for tax payment for the king.


கருத்துகள் இல்லை: