ஞாயிறு, 24 ஜனவரி, 2016

றகரம் ஷகரமாய் மாற்றப்படும்,

தமிழுக்கு ற என்னும் எழுத்து சிறப்பானது. இதுபோலவே, அயல்மொழிகட்கு ஷ, ஜ, ஸ என்பவை சிறப்பனவை. சிறப்பு என்றால் இவ்வெழுத்துக்கள் அம்மொழிக்காரர்களின் மனத்தை வெகுவாகக் கவர்ந்தவை. மற்றபடி, இவை எல்லாமும் மனித நாவினின்று வழிந்து பறந்து வெளிவந்து கேட்போனின் செவிப்பறைகளில் மோதுபவைதாம் . இவ்விடையத்தில் யாவும் ஒப்பனவாம்.

இப்போது பாருங்கள், றகரத்துக்குப் பதில் ஷகரம் இட்டுச் சொல்லை உருமாற்றிவிடலாம்.   படிப்போன்  ‍‍

நூறாண்டு புழங்கினும் மாறின எழுத்துகள்
கூறாது விடிலோ கொஞ்சமும் அறியான்.

ஆகையால்,  இப்போது ஒரு பயிற்சியில் ஈடுபடுவோம்.


சிறு >  சிஸு

சிறியர்  > சிஷ்ய‌
பெரியவரான குருவிடம், சிறியவர்களான சிஷ்யர்கள் பாடங்கேட்பர்,
வயது ஆகியிருந்தாலும் அறியார் குருவிற்குச் சிறியவர்தான்.

சிறுமைக்குள் அறிவுக் குறுக்கமும் அகவைச் சிறுமையும் அடங்குவன.

இறைவர் > இஷ்வர் > ஈஷ்வர். அல்லது  ஈஸ்வர்   .இகர நீட்சித் திரிபு. (முதனிலை நீண்டு நடு திரிதல்)

ஒரு சொல்லை மாற்றுகையில் ஒலிக்க எடுப்பாகவும் எளிமையாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும், இல்லையேல் பயன்படுத்துவோரிடம் எடுபாடாது கெடும்,

புள் >  புட்சி  >பட்சி.   உகர அகரத் திரிபும்  ஓர் விகுதி பெறுதலும்.
கதை  > கிதை  > கீதை.  (  அகர   ஈகாரத்  திரிபு. )  கிதை  என்றே விட்டுவிட்டால்
இன்னா ஒசைத்தாகிவிடும்.  (அதாவது  ஒலி  நயக்  கேடாம் )

will edit 

கருத்துகள் இல்லை: