சனி, 26 நவம்பர், 2022

திருட்டுப் போனால் என்செய்வது?பூசைக்குரிய நகை!

( இது ஒரு பழைய நிகழ்ச்சியைக் கூறும் வரிகள்) 


கோவி   லென்பது பொதுவிடம் --- அங்கேயும்

கோணல் புத்தியர் வருவதுண்டு!

ஆவி  போயினும் பிறர்பொருள் --- ஏலா

அன்பர்  தாமுமே  வருகின்றனர்.

திருடர் இயல்பு:

நீட்டும் கைக்கெது கிடைகுதோ  ---  எண்ணம்

நீங்கா முன்னதை எடுத்திடுவர்

பாட்டின் நல்லொலி திரும்புமுன் ---  எடுத்துப்

பக்கெனப் பைக்குள்  போட்டிடுவர்.

நகைகள்

அம்மன் போட்டிட  அணிசெய  ---   பற்றர்

ஆழ்ந்தும்  எண்ணியே  வாங்கினவே!

எம்மின் கண்களை மறைத்தவர்  --- திருடர்

கொண்டு   சென்றிடில் செய்வதென்னே?


போனவை போனவையே  ஆகட்டும் நீநெஞ்சே

ஆனவைக்கு  நீமகிழ்  ஆவன --- ஈனுபயன்

நீயறிந்து  மேற்கொள்வாய்  ஆயம்மை தானறிவாள்

ஓயாத தொண்டுசெய் வா.



 

பல நகைகளில் எது தொலைந்தது என்று இப்போது தெரியவில்லை. இருந்தாலும் இதுவும் அங்குகொண்டுவரப்பட்டவைகளில் ஒன்று.


கோணல் புத்தியர் -   நேர்மையற்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர்.

ஆவிபோயினும்  - உயிர் இழக்க நேர்ந்தாலும்

ஏலா - கொடுத்தாலும் ஏற்க மறுக்கும்

எண்ணம் நீங்கா முன் -  திருடத் தீர்மானித்து,  வசதி இல்ல்லாமல் அதை

மாற்றிக் கொள்ளுமுன்.

பாட்டின் நல்லொலி :  பாடிக் கொண்டிருப்பவர்கள் நிறுத்திவிட்டால்

மற்றவர்கள் பார்க்கக்கூடும்,  அதன் முன்பே திருடிவிடுதலைக் குறிக்கிறது.

ஆழ்ந்தும் எண்ணியே -  நல்லபடி யோசித்து.

ஈனுபயன் -  பிறப்பிக்கும் பயன்.

ஆய் அம்மை -  துர்க்கை அம்மன்.


அறிக மகிழ்க

மெய்ப்பு   பின்னர்



கருத்துகள் இல்லை: