வியாழன், 11 ஜூன், 2020

அரசனும் அரணும்.( ராஜன் - ராணா - ராணி.)

இங்குத்   தலைப்பில் கொடுத்துள்ள  சொற்களின் முகிழ்புலங்களைக் கூடுமானவரை சுருங்கத் தெரிந்துகொள்ள முனைவோம்.

கூறியன மீண்டும் கூறப்படாதொழியுமாறு, அரசன் என்ற சொல்பற்றி அறிய
இவ்விடுகையைப் படித்தறியப் பரிந்துரைப்போம்:

https://sivamaalaa.blogspot.com/2018/12/blog-post_12.html  -   அரசன்.

அரசன் என்பதன் அடிச்சொல் அர் > அர ķĺĺò
என்பதுதான். உடனிருப்பவர்களையும் நாட்டு மக்களையும் அடக்கி ஆளும் வலிமை பெற்றவனே அரசன். குடிவாழ்நரை இடர்களிலிருந்து பாதுகாக்கும் நன்மையையும் அரசனே செய்தான்.  அயலார் உட்புகுந்து மக்களைத் துன்புறுத்தாமல் அவன் பார்த்துக்கொண்டான்.  இவற்றுக்காக அவன் கோட்டைகளையும் அரண்களையும் நிறுவினான்.

அர் என்ற அடியினின்றே அரண் என்ற சொல்லும் தோன்றியது. அரண்களை உருவாக்கி  ஆட்சி இனிது செல்லுமாறு பார்த்துக்கொண்டமையின், அவன் அரணியன் (  "அரணன்"  "அரணான்" )  ஆவான். அவனுடன் இருந்த அவன் அரசி அவனின் ராணி ஆனாள்.   அரண் >( அரணி ) > ராணி > இராணி..

அயன்மொழித் திரிபு  ராணி என்பது.   அரண்களை ஆட்சி புரிந்தோர் அரசர் குலத்தோரே ஆதலின்,  அரசி ராணி எனப்பட்டதும் அவர்கள் வாழ்ந்த பெருமனை அரண்மனை எனப்பட்டதும் பொருத்தமாய் அமைந்தன.

அரங்கன் என்ற சொல் ரங்கன் என்று தலையிழந்தது. . இதுபோலவே ராணி என்ற சொல் தலையிழந்து அவ்வாறாயது..

அரசனும்  ராணா  ( அரணன் - வழக்கழிந்த சொல்வடிவம்)  என்றும் அரசி,  ராணி மகாராணி என்றும் சுட்டப்பெற்றனர்.

இற்றை ஆய்வில் திராவிட அல்லது தமிழின மக்களே அரசுகளை நிறுவினர் என்று கருதப்படுகிறது.

அறிவீர் மகிழ்வீர்.


( இடைவெளி கடைப்பிடித்து நோயினின்று
காத்துக்கொள்ளுங்கள் ).

மெய்ப்பு - பின்

இது  ( ķĺĺò )  என்ன குறிப்பு என்று தெரியவில்லை. கள்ளப்
புகவர்கள் இதைப் பதித்துள்ளனர். ஏன் என்பது தெரியவில்லை.
என்ன நடக்கும் என்று பார்ப்போம்.



கருத்துகள் இல்லை: