திங்கள், 22 ஜூன், 2020

அதிகாரம் (நூற்பிரிவு)

அதிகாரம் என்ற சொல்லைச் சிந்திப்போம்.
இங்கு நாம் கவனிப்பது நூலதிகாரம். அதாவது நூலில்
பிரிவுகளாக வரும் அதிகாரங்கள். முன் இதை 
அதி + காரம் என்று பிரித்துப் பொருள்கூறுவதுண்டு.


அத்தியாயம் என்ற சொல்லுக்கு இங்குப் பழைய 
இடுகைகள் தந்துள்ள பொருளைச் சார்ந்தே இதை
விளக்கப் புகுவோம்.


அற்று > அத்து. இது பேச்சு வழக்கிலும் இயல்பான
திரிபாகும்.


இகு இது இங்கு என்பதன் ஙகர ஒற்று நீங்கிய
இடைக்குறைச் சொல்.  எடுத்துக்
காட்டு  இன்னொன்று: 

ஓங்கு > ஓகு > ஓகம் என்பது போலுமே.

ஆரம் : இது ஆர்தல் என்னும் வினையில் அம் 
சேர்ந்த தொழிற்பெயர். நிறைவு என்பது 
இச்சொல்லின் பொருள். இச்சொல்லுக்கு
வேறு பொருட்களும் உள. சூழ்தல் அல்லது
சுற்றி இருத்தலும்  ஆகும்.


அத்து = முடிந்து,
இகு = இதே இடத்தில் அல்லது நூலில்
ஆரம் = நிறைவாகுவது.


அத்தியாயம் ஒவ்வொன்றும் முடிந்து முடிந்து 
தொடங்கித் தொடங்கி  நிறைவாகுவதுதான். ஆதலால் 
பொருள் பொருத்தமாக உள்ளது.


அத்து இகு ஆரம் > அத்திகாரம் , மீண்டும்
இடைக்குறைந்து அதிகாரம் ஆகிறது.

தமிழ்மொழி முழுவதும் இவ்வாறு சொற்களைத்
தொகுத்தலும் குறைத்தலும் மிகுதி. விழிப்ப
நோக்கின் விரியும் அறிவு; புரியும் நிலைமை.

என்னில் -  எனில்,  தன்னில் - தனில்;
முக்கண்ணா போற்றி -  முக்கணா போற்றி.


அத்தியாயம் என்பதில் த் என்ற ஒற்று
வீழவில்லை. இதில் வீழ்ந்துள்ளது. இது
சொற்சுருக்குக்கும் இனிமைக்கும் ஆகும்.


சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம்
என்பதில் த் என்னும் ஒற்று வீழ்ந்துள்ளது. 
லகரம் ரகரம் ஆயிற்று. இவை பல 
சொற்களில் காண்புறும் நடைமுறைகளே.


தட்டச்சு:  சரிபார்க்கப்பட்டது. 23062020

கருத்துகள் இல்லை: