புதன், 3 ஜூன், 2020

உண்ணாமலே இருந்துவிட்டால்.......

உண்ணாமல் இருந்துவிடில்  விண்ணாகும் வீடெமதே,
உடலங்குப் போகாது நிழல்வடிவில் அங்கிருப்போம்.

தண்ணீரைக் குடிக்காமல் முந்நாளில் முடிவாழ்வாம்
தாரணியின் பொய்வாழ்வில் காரணமாய் மகுடமுகி!

தலைமுன் புறம்மூடு தள்ளிநில்லு கைகழுவே
இலைகூடத் தரைதனிலே இருந்துவிடும் விழுந்தபின்பு

மனிதவுடல் ஆறடிக்கீழ் மரத்திலையோ மேல்தரையில்,
புனிதமிந்த வாழ்வென்று புகல்வதெலாம் பொய்தானே.

வாய்வயிறே ஒன்றாகும் மனிதருக்கும் விலங்குக்கும்
மாயும்வரை திரிந்துவிட்டு ஓய்ந்தபின்னே ஒழிந்திடுவாய்.


பொருள்


மகுடமுகி -  கொரனாவைரஸ். 

கருத்துகள் இல்லை: