புதன், 17 ஜூன், 2020

இரங்கல்



போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம்

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே
நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
றாரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே


உரை:

போரில் இறந்தவர்  நோயிற் பிரிந்தோர் எனப்பலராம் -
இந்தக் கடினமான காலத்தில் பலர் போரில் இறந்தனர், பலர்
நோயினால் சென்றுவிட்டனர்;

யாரா யினுஞ்செலும் யாவருக்  கும்நெஞ் சுருகியதே - 
இத்திறத்தார் அனைவருக்கும் நம் நெஞ்சுருக்கம் உரித்தாகுக.

நேரும் துயர்தனை   நீக்கி   நிலைகொள் திறம்பெறுகென்
று  -  ( இவர்கள் உறவினர் நட்பினர் முதலானோர்)  அதனால்
அடைந்த துக்கத்தினின்று மீண்டு நிலையான மனத்திடத்தினைப்
பெறவேண்டுமென்று; 

ஆரருள் தேவ னடிதமில் வீழ்ந்தேம் வணங்கிநின்றே
-  அருள் நிறைந்த இறைவன் அடிகளின் முன் நின்று வணங்கி
( இறைஞ்சிக்கொண்டு) விழுந்தேம் யாம்

என்றவாறு.

ஆர் அருள் - வினைத்தொகை.






கருத்துகள் இல்லை: