புதன், 24 ஜூன், 2020

இலடாக்கு (Ladakh)


இங்குள்ள தாளிகை வலைத்தளத்துக்குச் சென்று, அதில் உள்ள படத்தைப் பார்த்தபின் கவிதையையும் பிறவற்றையும் வாசிக்கவும்:

https://www.hindustantimes.com/india-news/india-china-hold-diplomatic-meeting-on-border-stand-off-in-ladakh/story-wrnl1LQZ1UTOdItWRJrMvL.html?utm_source=browser_notifications&utm_medium=Browser&utm_campaign=notification


நிலவின் படமென உலவுமென்  கண்கள்;
கண்களை உறுத்தும் கருமுகப் பாறை;
பாறையின் பாங்கினில் பயிர்களோ இலவே;
இலர்சிலர் உளர்; இல்  அடாஆக்கு மலையே.


அந்தாதிப் பாடல்.

உரை:

என் கண்கள் இது நிலவின் படமோ என்று
அப்படத்தில் மேல் உலாவுகின்றன;
அந்தக் கருமுகம் காட்டும் பாறைகள் கண்களை
உறுத்துகின்றன.
எந்தப் பயிரும் அங்கு முளைக்கவில்லை;
சில ஏழைகள் பக்கத்தில் உள்ளனர்.

இது இலாடாக்கு மலை.

இல் = வீடுகள்' (வீடுகளுக்கு)*
அடா = அடுத்துக்கூட வர இயலாமல்;
( கொடிதானமுறையில் )*
ஆக்கு = இயற்கை ஆக்கிய; 
மலை.

*இப்படி உரைப்பினும் ஆகும்.

இல்+ அடா+ஆக்கு = இலாடாக்கு!!.
(பயன்பாடற்ற நிலப்பகுதி
என்பது.)

எ-டு:

அடு > அடி. (தொழிற்பெயர்).  அடுத்துவரலால் அடி என்ப.

மெய்ப்பு பின்.

கருத்துகள் இல்லை: