வெள்ளி, 30 அக்டோபர், 2020

மணிமேகலைக் காப்பியம்: அட்சயபாத்திரம்.

 ஒன்றைப் பிறருக்கு -  அது வேண்டியோருக்கு -  அளிப்பது ஓர் அருள், ஓர் அன்பு. இதை "அளி" என்று இலக்கியங்கள் புகழும்.  இது குழைவையும் குறிக்கும்.  " அளிந்த ஓர் கனி " என்பது திருவாசகம். இரக்கமும் குறிப்பது ஆகும்.

அட்சயப் பாத்திரத்திலிருந்து மணிமேகலை அள்ளி அள்ளி மக்களுக்கு வழங்குகிறாள். எல்லோருக்கும் அமுதளித்து இரக்கம் காட்டுகின்றாள்.  இப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாதது.

அட்சயப் பாத்திரம் என்பதில் அட்சய என்ற சொல்லை அறிவோம்.

அளிச்செயல் பாத்திரம்

அச்செய பாத்திரம்

இங்கு  ளி என்ற எழுத்துக் குறைவுண்டது.  லகர ஒற்றிறுதியும் கெட்டது.

இந்த நிலையில் இது அட்சய என்று மாறி அமைந்தது. இஃது ஓர் ஒலிநயமூட்டுத்

திருத்தம்.

இந்தத் திரிபுகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்:

இடுக்கண் > இடுக்கட்டு > இக்கட்டு.  (டு இழப்பு)

சகக்களத்தி >  சக்களத்தி.  ( க இழப்பு)

பகுக்குடுக்கை >  பக்குடுக்கை  (கு இழப்பு)

சறுக்கரம் >  சக்கரம் ( று இழப்பு)

மக + கள் = மக்கள்.

இச்சொல் ( அட்சய ) ஒரு பலபிறப்பிச் சொல்.  

அருட்செயல் >  அட்செய  > அட்சய என்றுமாகும். ரு, ல் இழப்பு.

மற்றோர் மாற்று விளக்கம்:

அட்சய பாத்திரம் http://sivamaalaa.blogspot.sg/2016/01/blog-post_29.html



கருத்துகள் இல்லை: