புதன், 14 அக்டோபர், 2020

கண்ணும் கடைக்கணித்தலும்.

 ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக எதிர்கொண்டு  தேடிப்பிடித்து அறிந்துகொள்ளலாம். ஆனால் இவ்வாறு செல்வதாயின், அதிக முயற்சியும் காலமும் தேவைப்படும்.  குறைந்த கால அளவில் மிகுந்த எண்ணிக்கையிலான சொற்களை உணர்தல் விழைந்தால்,  சொற்களின் அமைப்புகளையும் மூலங்களையும் அறிந்துகொள்வது பெரிதும் உதவும் என்று ஆசிரியன்மார் சொல்வர். எடுத்துக்காட்டாக, பூ என்ற சொல்லுக்கு உள்ள பொருள்களில் தோன்றுதல்( உண்டாதல் )  என்பதும் ஒன்றாம்.

இவ்வுலகம் உண்டான ஒன்று என்று மக்கள் நினைத்தனர். ஆகையால் உலகிற்கு ஏற்பட்ட பெயர்கள் சிலவற்றில் இப்பொருளைக் கண்டு மகிழலாம்.

பூமி. -- "பூத்த இவ்வுலகம்." --   தோன்றிய இவ்வுலகம்.   இச்சொல்லை வாக்கிய வடிவில் தருவதானால்,  பூத்திருக்கும்  இது என்ற கருத்துதான்   --- சுருங்கி  பூ-ம்-இ என்று என்று அமைந்தது.  பூம் = பூத்திருக்கும்   > பூ~ம்.  இ - இது.

இப்புவியும் அழகியது.  ஓர் பூவனம்.  தோன்றிய வனம்.  இது சுருங்கிப் புவனம் ஆனது.

பூ இ - பூத்த இது >  பூவி ( முதல் சுருங்கி )  புவி,  அதே பொருள்.


இவ்வாறே கண் என்ற சொல்லினின்று அமைந்த சொற்கள் பல.  பழங்கால மனிதன் கண்ணால் கவனமாக எண்ணித்தான் கணிக்க அறிந்துகொண்டான்.

ஆகையால் கண் என்ற சொல்லினின்று கணித்தல் என்ற சொல்லும் வந்தது.

கண் > கணக்கு

கண் > கணிதம்.

கண் > கணி

கண் > கணியன் ( சோதிடன்)

கண்ணை மூடிக்கொண்டும் கணிக்கலாமே என்பீர். எனினும் அஃது இயல்பன்று.

இவ்வாறு அறிக.

மேலும் அறிய:  https://sivamaalaa.blogspot.com/2018/03/blog-post_9.html

குணமென்னும் சொல்:   https://sivamaalaa.blogspot.com/2019/07/blog-post_18.html

நம் குறைகளைச் சொல்லி இறைவனிடம் / இறைவியிடம் கண்கலங்கினால்

நம்மைக் கடைக்கண்ணால் சிறிது பார்த்து அவ் இறை அருளுமாம்.  இதற்கு

கடைக்கணித்தல் என்ற சொல் உருவானது. கடைக்கண்ணால் நோக்கி அருளுதல்.

அறிவீர். மகிழ்வீர்.


தட்டச்சு பிறழ்வுகள் பின் கவனிக்கப்படும்.

மெய்ப்பு:  15.10.2020.




கருத்துகள் இல்லை: