வெள்ளி, 30 அக்டோபர், 2020

யானைக்குட்டி

 இரண்டு வயது  யானைக்குட்டி

புரண்டு விழுந்து  சண்டைபோடும்

பிறந்த தாயும்  தந்தை யென்றும்

சுரந்த அன்பு  காணவில்லை.


அன்னை வந்து  அணைத்த போதும்

அஞ்சுதலில் முட்டும் கோபம்

பின்னை வந்து மனிதர் பாலும்

பீடையாகிப் போனதாமோ!


பிள்ளைகள் அம்மாவுடன் சண்டையிடுதல், இந்த யானைக்

குட்டி அதன் தாயுடன் சண்டையிட்டது போன்றது.  விலங்குக் குணம்

மானிடன் அடைந்துவிட்டானோ என்பது இந்த வரிகள்

எழுப்பும் கேள்வியாகும்.


பிறந்த -  தான் பிள்ளையாய்ப் பிறந்த

அஞ்ச்சுதல் இல் -   அச்சமில்லாமல்

சுரந்த -  பிள்ளையிடம் ஏற்பட்ட

மனிதர்பாலும் -  மனிதரிடத்தும்

பீடை - நோய்.

கருத்துகள் இல்லை: