ஞாயிறு, 11 அக்டோபர், 2020

சீணித்தல்

 நன்றாக வளர்ந்துவந்துகொண்டிருந்த ஒரு குழந்தைக்கு,  அதன் வளர்ச்சி நிற்கவோ குறையவோ செய்யுமாயின் அது சீணித்துப் போய்விட்டதென்பார்கள். ஊர்ப்புறங்களில் "வசக்கெட்டு"ப் போய்விட்டது என்று சொல்வதுமுண்டு. இச்சொல்  (சீணித்தல் ) இவ்வாறு உருவாயிற்று:

நிற்றல் >  நித்தல். என்றாகும்.  -ற்ற என்பது -த்த என்று மாறுவது பெருவழக்கான திரிபு. ஓர் எடுத்துக்காட்டு:-

சிற்றம்பலம்

சித்தம்பரம்  லகரமும் ரகரமாய் மாறிற்று.

இச்சொல் இடைக்குறைந்து:

சிதம்பரம் ஆனது.1


இச்சொல்லின் உருவாக்கத்தை வேறுவிதமாகக் கூறுவோருமுண்டு. ஆயினும்

இதுவே சரியான சொல்லமைப்பு ஆகும்,


நித்தல் என்பது இவ்வாறமைய,3

சீர் + நித்தல் >   சீணித்தல்.

சீர்நித்தல் > சீணித்தல் >  க்ஷீணித்தல். என்றாம்.


இன்னோர் எடுத்துக்காட்டு:

சீர்த்தேவி >  சீதேவி > ஸ்ரீதேவி.

சீர் என்றது சீ என்றானது கடைக்குறை.

வாருங்கள் <  வார் + உம்+ கள் >  வா(  )+(  ) ம் + க(ள்) > வாங்க.

வார் > வா.  சீர் > சீ.

வாராய், நீ வாராய்.  வரு+ ஆய் என்பது வாராய்  ஆகும்.

வாரீர் வாரீர். என்பதும் காண்க.

 எடுத்துக்காட்டுகள் சில தரப்படும். இன்னும் வேண்டின் நம் இடுகைகள் பலவும் வாசித்துக் குறிப்புகளும் கொண்டு போதிக்கவும்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

சீர்+வனைதல் > சீவனை > சீவனம் > ஜீவனம்.2

வனைதல் : செய்தல், அலங்கரித்தல்  என்பது.

வாழ்நாளைச் சீராக்கிக் கொள்ளுதல்.

சீர் நிற்றலே சீணித்தல் என்றாயிற்று அறிக, மகிழ்க.


குறிப்புகள்

1  பேராசிரியர் இரா.பி. சேதுப்பிள்ளை. பிறரும் கூறியுள்ளனர்.  எமது

ஆய்வும் இம்முடிவினதே.

2  உயிர் > யிர் > ஜீ.  > ஜீவன், ஜீவன.  இலங்கை ஞானப்பிரகாச அடிகளார்.

3 வற்றல் > வத்தல்.  வத்தச்சி என்ற பேச்சு வழக்கும் காண்க.

தொற்றல் > தொத்தல். ( தொற்றிக்கொண்டு நடப்பவன்).

உடற்குறை உடையோர்க்கு முன் காலங்களில் யாரும் அவ்வளவு இரக்கம்

காட்டுவதில்லை என்று அறிகிறோம்.


தட்டச்சுப்பிழைத் திருத்தம் பின்

கருத்துகள் இல்லை: