செவ்வாய், 27 அக்டோபர், 2020

வயோதிகர் இன்னொரு முடிபு

 வயோதிகன் என்ற சொல்லை நாம் இங்கு முன் விளக்கியுள்ளோம்.  அதனை நீங்கள் முன் வாசித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். இன்னும் இல்லை என்றால் இப்போதும் அது இங்கு கிட்டுவதால் வாசித்துக்கொள்ளுங்கள். 

வாசிப்பதற்கு இங்குச் சொடுக்கவும்:

வயோதிகன்  https://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_29.html

அகவை அதிகம் எட்டிவிட்டவர்கள் சிலர், தம்மால் முடியவில்லை என்றும் தமக்கு வயது ஆகிவிட்டதென்றும் சொல்லி,  கொஞ்சம் உழைப்பு தேவைப்படும் வேலைகளிலிருந்து விலகிக்கொள்வர் என்பதும் உண்மைதான். அகவை கூடிவிட்டால் பலவித உபாதைகள் அல்லது உடலியலாமை ஏற்பட்டுவிடுகின்றன.

தம் வயதை அடிக்கடி " கூடிவிட்டது, கூடிவிட்டது" என்று துன்புற்றுக்கொண்டிருப்பவர்களே வயோதிகர் என்று சுட்டப்பட்டனர் என்று ஒரு கருத்தும் உள்ளது. இவர்கள் பெண்டிர் என்றும் பின்னர் அது ஆண்களைக் குறிக்க மாறியது என்பதும் கருத்து.

வயது + ஓதி + கன்னியர் - "வயோதிகன்"  என்பதாக மருவி வயோதிகன் என்று , குறுகிப் பெண்பாலிலிருந்து ஆண்பாலானது என்பதும் ஒன்று.

உபாத்தியாய என்ற சொல்லும் முதலில் பெண்களில் இலக்கண  ஆசிரியத் தொழிலரைக் குறித்த சொல் என்றும் கூறுவதுண்டு.


 

கருத்துகள் இல்லை: