வியாழன், 24 நவம்பர், 2016

வாண்டாய் இருக்கையில்

வாண்டாய்  இருக்கையில் வண்டிச் செலவாசை
தூண்டா  நிலையிலும் துள்ளிக் குதித்தோடி
வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே
மாண்டாட் கிரங்கு மனம் .

(இது  மகிழுந்தில் பயணிக்கும் ஆசையினால் முன்பின் அறியாதவன்
 அழைக்க அவனுடன் சென்று  ;அவனால் கற்பழித்துக் கொல்லப்பட்ட ஒரு சிறுமியின் துன்பக்கதை. உலகம் பொல்லாதது.  இப்படி எத்தனை நிகழ்வுகளோ)

வேண்டாத வீணனுடன் வேறுபடா தோடியே:

ஒவ்வொரு சீரிலும் நெடிலில் தொடங்கும்படி தொடுத்ததனால் இது நெடில் வண்ணம். தொல்காப்பியர் காலத்தில் வண்ணங்கள் இருபது. "வண்ணம்  தானே நாலைந்தென்ப "  என்பார்   அவர். பிற்காலத்தில் இவை பெருகின.


கருத்துகள் இல்லை: