சனி, 19 நவம்பர், 2016

சொல்லமைப்பு: மகத்தான

மகன் என்ற சொல்லைப் பிரித்தால் மக+ அன் = மகன்  என்று அறியலாம்.  இச்சொல்லில் மக என்பதே பகுதி.  அன் என்பது
இறுதிநிலை அல்லது விகுதி. விகுதி என்ற சொல் மிகுதி என்பதன்
திரிபு ஆகும். ம‍~வ போலி. மக என்பதே சொல். அது  மிகுந்து  ( விகுதி பெற்று நீண்டு ) மகன்,மகள், மக்கள், மகார்,  என்றெல்லாம் வந்தன.

விகுதி என்பது விகுருதி அல்லது விக்ருதி என்ற  அயற் சொல்லுடன் ஓலியொப்புமை  உள்ளதாகும். அச்சொல் மாற்றம் என்று பொருட்படும் .

ஆனால் விகுதி  சேர்வதால் பகுதி  வேறொரு சொல் ஆவதில்லை. இவ்விகுதியும்  பகுதியில் தோன்றுவதில்லை. பொருள் வேறு பட்டது கா3ட்ட
இணைக்கப் படுவதே.  மகன் என்பதில் வரும்  ஆண் பால்  அன்   அகற்றப் பட்டுப்  பெண்பால் காட்ட  அள் புணர்த்தப் படுகிறது.     பகுதி  மக  என்பதுதான்.

மேலும் மகவு, மகவான் (பிள்ளைகுட்டிக் காரன் ) மகவாட்டி  (பிள்ளை குட்டிக் காரி ), மகப்பேறு,  மகம்> மிருகம்,  மகவின்கோள்,    முதலிய சொற்களுமுள.

மக என்பது அங்குதான் உள்ளது. மகள் எனப் பெண்ணை உணர்த்துகையில்  அள் என்ற விகுதி இணைந்து சொல் வேறுபடுகிறது. அள் என்பது அவள் என்பதன் சுருக்கமாகக் கருதினும் பிழையில்லை. குகைமாந்தர் காலத்தில் அ = அந்த என்றும் ள் = பெண் என்றும் பொருள்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மொழியை நாம் அறிய வாய்ப்பில்லை. அ = அந்த;  வ்= உடம்படுமெய். அ= அந்த.(இரண்டாவது முறையாகச் சுட்டுச் சொல் வந்தது). ள் ‍= பெண்.
அ+ வ்+ அ+ ள் = அவள். சுட்டு இருமுறை வருவது தேவை இல்லை என்று குகைக்குப் போய் அந்த முந்தியல் மாந்தனிடம் சொல்லுங்கள்.
இலக்கணம் வந்தது பண்பாடு அடைந்தபின்.

இராசராச சோழனின் ஆட்சியின் பிற்பகுதியில் அவன் மகன் இராசேந்திர சோழன் படைநடாத்தினான். மகனும் தானுமாய்ப் போர்க்களங்களில் வெற்றியை ஈட்டினர். அதனால் அவன் மகத்தான மன்னன் ஆனான். மக  எனின் மகன்; தான = தான் பிறவும் உடையோன். இதில் பிற ஆவன படைகள். இது மகத்தான = பெரிய என்ற பொருளையும் தழுவி நின்றது
காண்க.

மோடி தானும் தம் அமைச்சர்களும் ( அவர் வழிகாட்டுதலில் நடக்கும் அமைச்சர்கள் )  இணைந்து செயல்படுதலால் மகத்தான என்ற வரணனைக்குப் பொருத்தமானவராகிறார். அமைச்சர்கள் மக போன்றோரே.


கருத்துகள் இல்லை: