வெள்ளி, 18 நவம்பர், 2016

மகத்தான அரசியல் வீரர் மோடி

மோடி என்பவர்.  இந்தியாவின் தலைமை அமைச்சர்.  ஆனால் நான் இந்தியாவில் இல்லை.  ஆனால் அவர் செய்வது என்னையும் பாதித்துவிட்டது. நான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள்  செல்லாமல் போய்விட்டன. முறைப்படி பார்த்தால்  எனக்கு அவர்மேல் கோபம் வந்திருக்க வேண்டும்.  அப்படி இருக்க அவரை மகத்தான வீரர் என்று நான் புகழ்வேனா ?

பாக்கிஸ்தானி டம்  பழைய இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டும் 500 கோடி உள்ளன என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.   இவை எல்லாம் நல்ல நோட்டுகள் என்று நாம் நினைக்க முடியாது.  அதேசமயம் அவர்கள்
அச்சடித்து வைத்திருக்கும் கள்ள நோட்டுகள் எவ்வளவு என்று முன்வந்த
செய்திகள் கூறின.  எல்லாம் கோடிக்கணக்கில் இருக்கலாம் ,  எல்லாம் பொய்யாகவும் இருக்கலாம்.  பொய்யென்று வைத்துக்கொள்ளுங்கள்.  இந்த  மோடி அறிவிப்புக்குப் பின்  இந்திய பாக்கிஸ்தான் எல்லையில் அமைதி நிலவுகிறது. கடுமையாக ஓடிக்கொண்டிருந்த துப்பாக்கிகளும் சுடும் இயந்திரங்களும் ஓய்ந்துவிட்டன . எதனால் ஓய்ந்தன ? வேறு காரணம் ஏதும்
இல்லாத  அல்லது கூற  முடியாத  போது   தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளே உற்ற காரணமாக இருக்கலாம்.  எல்லாப் புகழும் மோடிக்கே போய்ச்  சேர்கிறது .  இனிப் புதிதாக நடவடிக்கைகளைப்  பாக்கிஸ்தான்  தொடங்கினாலே உண்டு.  அதுவரை போர் ஓய்வைத்  தருகிறது  இது.

அணுவாயுதப் போர்வரை  போகும்படி விரிந்துவிடக் கூடிய  தாய்ப் போருக்கு  ஒரு நிறுத்தம் தந்த மோடி மகத்தான வீரர்.

இனி மகத்தான என்ற சொல்லை ஆய்ந்து அது இங்கு  பொருத்தமா என்று பார்ப்போம்.. அதாவது  தற்குறிக் காரணங்களைக் கைவிட்டு விடாமலே இந்த  ஆய்வினை மேற்கொள்வோம் .

Read also:

http://www.fakingnews.firstpost.com/world/pak-used-100-usd-to-print-a-fake-500-rupee-indian-note-musharraf-172   Gen Musharaff.



https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=3&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggpMAI&url=https%3A%2F%2Fwww.quora.com%2FCan-Pakistan-still-print-Indian-currency-after-the-scraping-of-old-currency-notes&usg=AFQjCNGadr85LKYgqrctBNBAzGYNsXUqJQ&sig2=itd2BjvZrXOry3288z9AZg

https://www.google.com.sg/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=2&cad=rja&uact=8&ved=0ahUKEwjFwaCusLXQAhUGNY8KHRlYCKAQFggiMAE&url=http%3A%2F%2Feconomictimes.indiatimes.com%2Fnews%2Fdefence%2Ffake-currency-worth-rs-167-crore-seized-by-government-in-five-years-pakistan-a-big-contributor-to-it%2Farticleshow%2F55355933.cms&usg=AFQjCNEbW8JdKn93T4zc3mbnDZm5OFv91g&sig2=adVxcFlW9NCHYgKD_3ttIg


will  review and edit

கருத்துகள் இல்லை: