செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

தாமம் ( குடியிருப்புகள்.) மற்றும் தாமான் ( மலாய் )

நீங்கள் மலேசியாவிற்குச் சுற்றுப்பயணம் வந்தீர்கள் ஆயின்
மக்கள் வதியும் குடியிருப்புகளுக்கு  " தாமான்" என்ற சொல் வழங்கப்படுவதைக் கண்டு மகிழலாம்.

தாமம் என்ற தமிழ்ச் சொல் " நகரம் " என்று பொருள்படுவதாகும். இது பழைய தமிழ்நூல்களில் உள்ளது.  இது பல பொருளுடைய சொல்.  தாமம் என்பதற்குக் கயிறு என்றும் பொருள் உண்டு.  தாமம் என்பது நகரம் என்றும் பொருள்தருவது.  பி ங்கலந்தை நிகண்டு காண்க.

இது நகரை  அல்லது குடியிருப்புத் தொகுதிகளைக் குறிக்குமாயின்  சொல்லமைப்பினை இவ்வாறு காணலாம்:

தா என்பது  தாழ் என்பதன் கடைக்குறை.    இங்கு தாழ்தலாவது முயற்சிகள் வேலைகள் எல்லாவற்றையும் தாழ  இட்டுவிட்டு,  (  கீழே போட்டுவிட்டு) ஓய்தல்.



மன்னுதலாவது  தங்குதல்.  மன்னுதல் என்ற சொல்லின்
பொருள்களில்  இதுவொன்று.

மன் என்பது சொல்லாக்கத்தில் மம் என்று திரியும்.  அதாவது
 0ன் என்பது 0ம் என்றாகும்,   எடுத்துக்காட்டு:    அறன்   அறம்.

இதன்படியே  தாழ் மன் >   தாமன்  >  தாமம்   ஆகும்.

வீடு என்ற சொல்லும்  வேலைகளை விட்டு இருக்கும் இடம் என்னும் பொருளதே என்பது  காண்க.

இந்தத் தாமன் என்ற சொல்லே  மலாயிலும் சென்று  ஏறித் தாமான் ஆயிற்று.

அம் தாமம் எனின் அழகிய தங்கிடம்.   ஆகவே அந்தாமம் என்பது சொர்க்கம் என்ற பொருளை அடைந்தது.  அம் =  அழகு.

இனித் தாழ்தல் என்பது   அரச குடும்பத்தினரின் மனைகட்கு அப்பால் தாழ்ந்த குடியிருப்புகள் எனினும் ஒக்கும்.

இன்று தாமம், தாமான் (  மலாய்மொழி )  முதலியன அறிந்தோம்.

குறிப்பு:  அகத்து  மன்னுதல்:   அகத்துமன் >  ஆத்துமன் >ஆத்மன் >  ஆத்மம் >  ஆத்மா,  உடம்பின் உள்ளிருப்பதாகிய ஆத்துமா. மன்னுதல்:  தங்குதல் என்பது கூறப்பட்டது.  இங்கும்  னகர ஒற்று இறுதி மகர ஒற்றிறுதி  ஆனது கண்டுகொள்க


தட்டச்சுப் பிழைகள் :  பார்வை பின்.

கருத்துகள் இல்லை: