வெள்ளி, 30 ஆகஸ்ட், 2019

ஸ்மரண என்ற நினைவுநிலை.

மனிதன் நினைவு நிலைத்திருக்கும்போதே இறைவனை நினைந்துருகித் தன் ஆன்மாவுக்குப் பற்றுக்கோட்டினைப் பெற்றுக்கோடல் அறிவுடைமை ஆகும். அவன் நினைவிழந்து நீங்கும் நேரத்தில் இஃது வாய்ப்பதில்லை.

ஆகவே நினைவுநிலை என்னும் ஸ்மரணம்  மிக்க முன்மை வாய்ந்ததாகிறது.

இப்போது இச்சொல்லை  அறிந்தின்புறுவோம்.

சுருக்கமாக:

மற அறு அணம்

அதாவது மறத்தலை அறுத்த நிலை.

அணம் என்பது  நிலை குறிக்கும் விகுதி.

அறு  அணம் என்பன  அறணம்  ஆகிறது.

மற அறணம்  >  மறணம்   ( மறறணம் >  மறணம் :  ஈரெழுத்துக் கெட்டன  )

வகர உடம்படுமெய் தமிழில் இரு முழுச்சொற்கள் புணர்வில் வரும்.  பிற மொழிப்புனைவில் மற்றும்  தமிழ்ச் சொல்லமைப்பிலும் வராதும் போம். பழைய இடுகைகள் காண்க.  மறணம் என்பதை   ஸ்மரணம்  ஆக்க அழகிய சொல் கிட்டிற்று.

இனி இப்புனைவில்  பகுதி + பகுதி + விகுதி என்று சொல்லானது பழமை நெறியினாலே அமைவுண்டு  அது  பிறப்பிக்கப்பட்ட பின்புதான் முறைப்படி
தேவையற்ற ஒலிகள் விலக்குண்டன என்பதும்  அறிக. தலையெழுத்தே பிற்சேர்க்கை ஆயிற்று.  இஃது  இரு பகுதிப் புனைவு,

இதுவே நினைவு நிலையைச் சுட்டும் சொல்.




கருத்துகள் இல்லை: