சனி, 10 ஆகஸ்ட், 2019

விசுறு என்பதும் அதிற்பிறந்த விசிறியும்

உட்ணம் அதிகமானால் ஒர் காற்றுமட்டையினால் விசிறிக்கொள்ள வேண்டும்.   அப்போது கொஞ்சம் சுகம் பெறலாம்.

உட்ணம் ( உஷ்ணம் ).  இச்சொல்லை அறிய இங்கே செல்லுங்கள்.

1.https://sivamaalaa.blogspot.com/2019/05/blog-post_17.html


2.https://sivamaalaa.blogspot.com/2012/09/blog-post.html


உகந்த நல்ல நிலையே சுகமென்பது.  இதையறிய இவ்விடத்து ச் செல்க:

https://sivamaalaa.blogspot.com/2014/05/blog-post_7.html.

உகத்தல்:  உக + அம் =  சுக + அம் =  சுகம்.


இப்போது  விசிறி என்ற சொல்:

வீசு > விசுறு.

இங்கு வீ என்ற நெடில் வி என்று குறுகிற்று.  விசு என்றானது,  உறு என்ற துணைவினையின் இறுதியை உள்வாங்கி,    வீசு  +  உறு > விசுறு ஆனது .
வீசும் காற்றுமட்டை விசிறி   ஆனது ஓர் இகரம் ஏறியபடியால்.

சுருங்கச் சொன்னால்:

வீசு +  உறு =  விசுறு.

விசிறு என்று சொல்வர்.   உ- இ  திரிபு.

அழகிய வடிவம், இன்புறுத்தும் திரிபுகள்.

மக்கள் நாவு இவ்வாறான சொற்களைப் படைக்கிறது.  புலவன் இவ்வாறு படைக்க அறியான்.  புலவன் என்பவன் கண்டுபிடிப்பாளன் அல்லன்.

இதற்கு ஆலவட்டம் என்ற பெயரும் உண்டு. பெரும்பாலும் அரசவை போலும் இடங்களில் காற்றுவீசப் பயன்படும்  அது.    அகலம் >  ஆல(ம்).  இது தாலவட்டம் என்ற திரிவழக்கும் உடையது.

விசிறி என்பது சிவிறி என்றும் எழுத்துமுறைமாற்று  அடையும்.

சிவிறுதல் என்று வினையுருத் தோன்றும்.

இன்னொரு காட்டு:   மருதை>  மதுரை.




கருத்துகள் இல்லை: